25 691b53209a165
செய்திகள்இலங்கை

பௌத்தத்தை அழித்து ஈழம் அமைக்கிறதா அரசாங்கம்? – அம்பிட்டிய சுமனரத்ன தேரர் ஆவேசம்! மகாநாயக்க தேரர்களுக்கு முக்கிய கோரிக்கை!

Share

திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக நிறுவப்பட்ட புத்தர் சிலையை அகற்றியமை தொடர்பாக, அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அவர்கள் அரசாங்கத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளையும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அம்பிட்டிய சுமனரத்ன தேரர், அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்தார். “வடக்கு மற்றும் கிழக்கில் பௌத்த தர்மத்தை அழித்து ஈழத்தை நிறுவுவதன் மூலம் புலம்பெயர்ந்தோர் செய்ய விரும்புவதைச் செய்யும் ஒரு அரசாங்கம் தற்போது ஆட்சியில் இருக்கிறது.”

தர்ம இலட்சினையுடைய புத்தர் சிலையை காவல்துறையினர் அவ்வாறு எடுத்துச் சென்றது, தனக்கோ அல்லது ஒரு விகாரைக்கான பிரச்சினையோ அல்ல என்று தெரிவித்த அவர், இது முழு நாட்டின் பௌத்தத்தின் மீதான தாக்குதல் என்றும் கூறியுள்ளார்.

“அப்போது தாங்கள் விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டதாகவும், இன்று தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பாதுகாப்புப் படையினரால் தாக்கப்படுவதாக அச்சமின்றி நாட்டிற்கு அறிவிப்பதாகவும்” அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் நிலைப்பாட்டைக் கண்டிக்கும் வகையில், அவர் மகாநாயக்க தேரர்களுக்கு ஒரு முக்கியக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

அரசாங்கம் பௌத்த மதத்தைப் பாதுகாப்பதாக உறுதிமொழி அளிக்கும் வரை, எந்த அரசாங்கத் தலைவர்களையும் விகாரைகளுக்கு அழைத்து வந்து ஆசி பெற வேண்டாம் என்று சங்க உத்தரவைப் பிறப்பிக்குமாறு மகாநாயக்க தேரர்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விவகாரத்தில் அரசாங்கம் உடனடியாகத் தீர்வு காணத் தவறினால், தாம் வீதிப் போராட்டத்தில் இறங்கப்போவதாகவும் தேரர் எச்சரித்துள்ளார்.

“இந்தப் பிரச்சினையை உடனடியாக நிறுத்தாவிட்டால், நாளை வீதிகளில் இறங்குவோம்” என்றும் தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...