25 6915d20fc755f
செய்திகள்அரசியல்இலங்கை

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மட்டுமே; சட்டத்தின் முன் அனைவரும் சமமே”: கார்த்திகை வீரர்கள் தினத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

Share

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மாத்திரமே என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நடைபெற்ற கார்த்திகை வீரர்கள் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் ஒன்றாக குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தற்போது ஒன்றிணைந்து விட்டதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

“கடந்த காலங்களில் அரசியல் தலைமைகளிடம் வாக்குமூலம் பெற விசாரணை அதிகாரிகள் அவர்களுடைய வீட்டிற்கு செல்ல வேண்டியிருந்தது. எனினும் தற்போது, சக மனிதர்கள் செல்லும் அதே வாசல் வழியாக அரசியல் தலைமைகளும் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்குச் சென்று வருகின்றனர். சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்களே,” என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

“எங்களுடைய அரசாங்கத்தை வீழ்த்துவதாகக் கதை பேசி வருகின்றனர். அது நடக்காது. இந்த அரசாங்கம் மேலும் உறுதியாகக் கட்டியெழுப்பப்படும். கட்சி பேதங்களின்றி அரசாங்கம் தனது பணியை நிறைவேற்றும்,” என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...