e8c8525a 174a 4fae a7ca 29dd06092afe
செய்திகள்இலங்கை

மன்னார் மாவட்டத்தில் 95 மாவீரர் பெற்றோர் கெளரவிப்பு: உணர்வுபூர்வமாக நடைபெற்ற மதிப்பளிப்பு நிகழ்வு!

Share

மன்னார் மாவட்டத்தில் வாழும் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரை ஒன்றிணைத்து அவர்களைக் கெளரவிக்கும் நிகழ்வு, மன்னார் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்புக் குழுவின் ஏற்பாட்டில் நேற்று உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

மன்னார் இரணைஇலுப்பை குளம், முள்ளிக்குளம், பண்டிவிருச்சான் பிரதேசங்களைச் சேர்ந்த 95 மாவீரர்களின் பெற்றோர் இந்த நிகழ்வின்போது கெளரவிக்கப்பட்டனர்.

மாவீரர்களின் உறவுகளுடன் 150க்கும் மேற்பட்டோர் பங்குபற்றலுடன் இந்த மதிப்பளிப்பு நிகழ்வு இடம்பெற்றது. அருட்தந்தையர்கள், முன்னைநாள் போராளிகள், மாவீரர் பெற்றோர்கள் மற்றும் மக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முதலில் மாவீரர் பெற்றோர்களால் பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மலர்மாலை அணிவிக்கப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

குறித்த நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோருக்குக் கெளரவிப்பு வழங்கப்பட்டதுடன், கெளரவிப்பு நினைவாக மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...