images 6 1
இலங்கைஅரசியல்செய்திகள்

வடகிழக்கில் தமிழ் மக்கள் தங்கள் பிள்ளைகளை நினைவுகூருகின்றனர்;  அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

Share

தமிழ் மக்களுக்கு முக்கியமான கார்த்திகை மாதத்தில் வடகிழக்கில் இருக்கின்ற தமிழ் மக்கள் தங்களுடைய பிள்ளைகளை நினைவுகூருகின்றனர் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) நாடாளுமன்றத்தில் இன்று (நவம்பர் 12) உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

“வரவுசெலவுத் திட்டம் குறித்து நாங்கள் பேசுகின்ற நிலையில், வடகிழக்குப் பிரதேசங்களில் வாழ்கின்ற தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பாகப் பேசுவது குறைவாக இருப்பதைக் காண முடிகின்றது. அந்த மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் கதைக்கின்றார்களா என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.”

கார்த்திகை மாதத்தின் முக்கியத்துவம்: “கார்த்திகை மாதம் என்பது தமிழ் மக்களுக்கு முக்கியமான மாதம் ஆகும். இந்த மாதத்தில்தான் விசேடமாக மாவீரர்களை நினைவுகூருகின்ற மாதம். அது மாத்திரமின்றி வடகிழக்கில் இருக்கின்ற தமிழ் மக்கள் தங்களுடைய பிள்ளைகளை நினைவுகூருகின்ற மாதம். இந்த மாதத்தில் இருந்துகொண்டு நாங்கள் திரும்பிப் பார்க்க வேண்டிய தேவை இருக்கின்றது.”

“இன்றைக்குப் பல தசாப்தங்களுக்கு முன்பு இந்த நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் அல்லது தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று போராடிய இளைஞர்கள் அல்லது போராடிய மக்கள் எதிர்பார்த்தது என்ன? அவர்களுடைய எதிர்பார்ப்பு, ஆசைகள், அபிலாஷைகள் என்ன என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.”

“அங்கிருக்கின்ற மக்கள் நிம்மதியாக, சந்தோசமாக வாழ வேண்டும் என்ற நோக்கில் அந்த வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் போராடியிருந்தால், இன்றைக்கு அந்த மக்களினுடைய கனவினை நனவாக்குகின்ற செயற்பாடுகளை எந்த ஒரு தமிழ்க் கட்சியாவது, எந்த ஒரு தமிழ் அரசியல்வாதியாவது அன்றைய காலகட்டத்தில் அவர்கள் செய்த அர்ப்பணிப்பு, தியாகங்களைச் செய்கின்றார்களா என்பது கேள்விக்குறியான விடயம்,” எனத் தெரிவித்தார்.

Share

Recent Posts

தொடர்புடையது
aswesuma
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டத்தில் பயன்பெறுவோர் கவனத்திற்கு: வருடாந்த தகவல் புதுப்பிப்பு ஆரம்பம்; டிசம்பர் 10 கடைசித் தேதி!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து...

anura sri lanka president
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியுடன் தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: ‘இனவாத வலைக்குள் நாடு சிக்காது’ – அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ...

25 6921dea82dcb6
உலகம்செய்திகள்

வரி விதிப்பு வழக்கு: டொனால்ட் ட்ரம்ப் கடும் நெருக்கடியில் – உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கி அவசர நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச வர்த்தக வரி விதிப்பு தொடர்பான ஒரு முக்கிய...

images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ஊடகப்படுகொலைகள், அடக்குமுறைகளுக்கு நீதி வேண்டும்” – பாராளுமன்றத்தில் துரைராசா ரவிகரன் வலியுறுத்தல்!

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடகப்படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க...