images 3 3
செய்திகள்இந்தியா

டெல்லி வெடிப்புச் சம்பவம்: குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் தாக்குதல் நடத்த முக்கிய சந்தேக நபர்கள் திட்டம் – அதிர்ச்சித் தகவல்கள் அம்பலம்!

Share

டெல்லியில் அண்மையில் நடந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கைதான முக்கிய சந்தேக நபர்கள், எதிர்வரும் இந்தியக் குடியரசு தினத்தன்று (ஜனவரி 26) செங்கோட்டைப் பகுதியில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணை வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளன.

இந்த வழக்கின் முக்கியச் சந்தேக நபரான ஒரு வைத்தியர், காவல்துறையினரிடம் வழங்கிய வாக்குமூலத்தில் இந்தத் திட்டத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

வெடிப்பு நடப்பதற்கு முன்னரே, தாமும் தமது சகாவான உமர் என்பவரும் இணைந்து செங்கோட்டைப் பகுதியை நோட்டமிட்டதாக அந்த வைத்தியர் தெரிவித்துள்ளார். இது குடியரசு தினத் தாக்குதல் திட்டத்தின் ஒரு பகுதியாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, கடந்த தீபாவளிப் பண்டிகையின்போது மக்கள் அதிகம் கூடும் இடத்தில் தாக்குதல் நடத்தவும் அவர்கள் திட்டமிட்டதாகவும், ஆனால் சில காரணங்களால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

செங்கோட்டையை நோட்டமிட்டதாகக் கூறப்படும் வைத்தியரின் சகாவான உமர் என்பவரே, செங்கோட்டை மெட்ரோ தொடருந்து நிலையம் அருகே சிற்றூந்து வெடித்தபோது உயிரிழந்தவர் என நம்பப்படுவதாகவும் இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் குறித்துப் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றன.

Share
தொடர்புடையது
world 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜும்ஆ பிரசங்கங்களின் போது நிதானத்தைப் பேணுமாறு உலமாக்களுக்கு அறிவுறுத்தல்!

நாட்டின் தற்போதைய சூழல் மற்றும் சர்வதேச விவகாரங்களைக் கருத்திற்கொண்டு, ஜும்ஆ பிரசங்கங்களின் போது கதீப்மார்கள் மற்றும்...

world 55
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு விசேட போக்குவரத்துத் திட்டம் ஆரம்பம்: கொழும்பிலிருந்து 2,300 மேலதிக பேருந்துகள் சேவையில்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக விசேட...

world 54
செய்திகள்இலங்கை

நெதன்யாகு மீதான ஊழல் வழக்கு மீண்டும் தொடக்கம்; ஈரானின் கடும் விமர்சனம்!

இஸ்ரேலில் ஈரான் உடனான போர் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த அவசரநிலை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...

world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...