25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

Share

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனை காஸா அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒவ்வொரு பிணைக்கைதிகள் உடல்கள் விடுவிக்கப்படும் போதும், இஸ்ரேல் தரப்பிடமிருந்து 15 பலஸ்தீனர்களின் உடல்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில், இதுவரை மொத்தம் 270 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹமாஸிடமிருந்து ஒப்படைக்கப்பட்ட மூன்று பிணைக்கைதிகளின் உடல்களும், கடந்த 2023 இல் அப்படையினரால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்ட இஸ்ரேல் வீரர்கள் மூவரது உடல்கள் என இஸ்ரேலிய அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் பத்தாம் திகதி காஸா போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையானதிலிருந்து ஹமாஸிடமிருந்து இதுவரை 20 பிணைக்கைதிகளின் உடல்கள் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும், எட்டு உடல்கள் இன்னும் ஹமாஸிடம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...