25 6909692213679
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம்: ஐஸ் போதைப்பொருள் மற்றும் வழிப்பறி கொள்ளை – தேடப்பட்டவர் உட்பட 6 பேர் கைது!

Share

யாழ்ப்பாணத்தில் (Jaffna) வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் உட்பட மொத்தமாக ஆறு பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணக் காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இந்த ஆறு பேரையும் கைது செய்து, காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணையின் போது, குறித்த ஆறு பேரில் ஒருவர் யாழ்ப்பாண நகர் பகுதியில் இடம்பெற்ற வழிப்பறிக் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர் என்பதனைக் காவல்துறையினர் கண்டறிந்தனர்.

அவரிடம் முன்னெடுத்த மேலதிக விசாரணைகளின் போது, கொள்ளையடிக்கப்பட்ட சங்கிலி மற்றும் கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்கள் என்பவற்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள ஆறு பேரையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்துத் தொடர் விசாரணைகளை காவல்துறையினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

1763816381 road 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மண்சரிவு அபாயம் காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதி மீண்டும் மூடப்படுகிறது!

கொழும்பு – கண்டி பிரதான வீதி இன்று (நவம்பர் 26) இரவு 10 மணி முதல்...