MediaFile
செய்திகள்இந்தியா

ஆந்திராவில் சோகம்: ஏகாதசி தரிசனத்தின்போது நெரிசலில் சிக்கி 12 பேர் பலி!

Share

ஆந்திரப் பிரதேசம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்கா பகுதியில் அமைந்துள்ள வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் ஏகாதசியை முன்னிட்டுப் பக்தர்கள் தரிசனத்திற்காகத் திரண்டபோது ஏற்பட்ட பயங்கரமான கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலியாகியுள்ளனர் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஏகாதசி விரதத்தையொட்டிப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தபோது, திடீரென ஏற்பட்ட நெரிசலே விபத்துக்குக் காரணமாக அமைந்தது. பலியானவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர்.

மேலும், இந்த நெரிசலில் சிக்கிய பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்து அறிந்தவுடன், காவல்துறையினர் உடனடியாகச் சம்பவப் பகுதிக்கு விரைந்து, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், நிலைமையைச் சீராக்கவும் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...