24 6756d8c892f60
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற சிறப்புரிமை மீறல்: யாழ். எம்.பி. அர்ச்சுனா சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்திடம் சாட்சியம்!

Share

தனக்கு இழைக்கப்பட்ட சில அநீதிகள் தொடர்பாக சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ள சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்தில் முன்னிலையாகி சாட்சியம் அளித்ததாக யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

தான் தற்போது ஜெனீவாவில் இருந்து சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியக் குழுவிடம் சம்பந்தப்பட்ட சாட்சியங்களை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராகத் தன்னால் 77 நாட்கள் பேச முடியாதபடி தற்போதைய சபாநாயகர் அனுமதி மறுத்தது மற்றும் தன்னுடைய ஒலிவாங்கியை (மைக்ரோபோன்) செயலிழக்கச் செய்தது போன்ற தனது சிறப்புரிமைகள் மீறப்பட்டது குறித்து தான் முறைப்பாடு செய்ததாகவும், அது தொடர்பான சாட்சியங்களை அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது பாதுகாப்பை நீக்க எடுத்த நடவடிக்கைகள் மற்றும் 323 கொள்கலன்கள் சம்பவம் தொடர்பில் தான் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்திய விடயங்கள் தொடர்பாக, தான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டமை மற்றும் தன்னுடைய சிறப்புரிமை மீறப்பட்டமை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாகவும் சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்திடம் தான் சாட்சியம் அளித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

தான் சாட்சியம் அளித்த விடயங்கள் தொடர்பாக, சர்வதேச பாராளுமன்ற ஒன்றியம் விரைவில் சம்பந்தப்பட்ட ஏனைய தரப்பினரிடமிருந்தும் சாட்சியங்களைப் பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...