25 68eee1ad403f8
இலங்கைசெய்திகள்

குருந்தூர்மலையில் நில அபகரிப்பு: தொல்லியல் திணைக்கள அதிகாரி மீது பௌத்த துறவியே குற்றச்சாட்டு – சாணக்கியன் கடிதத்தை வெளியிட்டார்

Share

குருந்தூர்மலைப் பிரதேசத்தில் திட்டமிட்டுக் காணிகள் அபகரிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, தொல்பொருள் திணைக்களத்தின் பிரதி அத்தியட்சகராகச் செயற்பட்ட ஜயதிலக்க என்ற பௌத்த துறவியால் இந்தக் காணிகள் அபகரிக்கப்பட்டதாக மிஹிந்தலை விகாராதிபதி ஒருவர் கடிதம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், குறித்த கடிதத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு இது குறித்துக் கருத்துத் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் வழியில் மிஹிந்தலையில் உள்ள விகாராதிபதியைச் சந்தித்ததாகக் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், விகாராதிபதி தனக்கு எழுத்து மூலமான கடிதம் ஒன்றையும் அதன் மூலம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) 2025 ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் திகதி அளித்த முறைப்பாட்டின் பிரதியையும் வழங்கியதாகத் தெரிவித்தார்.

ஜயதிலக்க என்னும் பிரதி அத்தியட்சகர், பௌத்த மதத்தோடு தொடர்புடைய சின்னங்களை மூடைகளில் கொண்டுவந்து, அவற்றைச் சுற்றியுள்ள நிலங்களிலும் வயல் நிலங்களிலும் வீசியுள்ளார்.

இவ்வாறு வீசப்பட்ட இடங்களை தொல்பொருள் நிலங்களாக ஆவணப்படுத்தி, அவற்றைத் திணைக்களத்திற்குச் சொந்தமானதாகக் கையகப்படுத்தியுள்ளார் என்று விகாராதிபதி வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் ஒரு பௌத்த துறவியே நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளது வரவேற்கத்தக்கது என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குறிப்பிட்டார்.

மேலும், விகாராதிபதியுடனான கலந்துரையாடலின்போது, நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளையும் கட்டாயம் கற்றுக்கொள்வதற்கான ஓர் சட்டமூலத்தைக் கொண்டுவந்து அனைவருக்கும் கற்பிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...