Jaffna Uni 1200x675px 28 10 25 1000x600 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். பல்கலைக்கழக நூலகத்தின் மேல் மர்மம்: இரண்டு துப்பாக்கி மகசின்கள் மற்றும் வயர்கள் மீட்பு!

Share

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில், இரண்டு துப்பாக்கி மகசின்களும் (Magazines) மற்றும் வயர்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

இந்த முக்கியமான பொருட்கள் யாழ். பல்கலைக்கழக நூலகத்தின் மேற்புறத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினம் (அக் 30) குறித்த பகுதியைச் சுத்தம் செய்த வேளையிலேயே இந்தப் பொருட்கள் இருப்பதை ஊழியர்கள் கண்டுபிடித்துள்ளனர். உடனடியாகப் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் கோப்பாய் காவல்துறையினருக்கு இது குறித்துத் தெரியப்படுத்தினர்.

இதனையடுத்து, நேற்று இரவு முதல் அப்பகுதியில் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இன்று (நவ 01) காலை, காவல்துறையினரும் விசேட அதிரடிப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மீட்கப்பட்ட இரண்டு மகசின்கள் மற்றும் வயர்களையும் பத்திரமாக மீட்டுச் சென்று கோப்பாய் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்துக் காவல்துறை மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3
செய்திகள்இலங்கை

தனிப்பட்ட பாதுகாப்பிற்காகத் துப்பாக்கிகள் கோரி சுமார் 20 எம்.பி.க்கள் விண்ணப்பம் – பாதுகாப்பு அமைச்சின் பரிசீலனையில் கோரிக்கை!

பாராளுமன்ற வட்டாரத் தகவல்களின்படி, தமது தனிப்பட்ட பாதுகாப்பிற்காகத் துப்பாக்கிகளை வழங்குமாறு சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

MediaFile 2
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியவில்லை: போதைப்பொருள் கலாசாரம் மேலோங்கியுள்ளதாக சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு!

தற்போதைய அரசாங்கத்தினால் சட்டம் ஒழுங்கை உரிய வகையில் நிலைநாட்ட முடியாமல் போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

MediaFile 3
இலங்கைசெய்திகள்

அரச வருமானம் 24.8% அதிகரிப்பு: 2025 முதல் அரையாண்டில் மொத்த வருமானம் ரூ. 2,321.7 பில்லியன்!

இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் அன்பளிப்புகள் நீங்கலாக அரசாங்கத்தின் மொத்த வருமானம் 2,321.7 பில்லியன் ரூவாக...

MediaFile 1
இலங்கைசெய்திகள்

உடுகம்பொல சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு: ‘உயரதிகாரியின் சகோதரி’ எனக் கூறியவர் போலியானவர் என பொலிஸ் உறுதி!

உடுகம்பொல வாரச் சந்தைக்கு அருகில் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த பெண்...