33 8 696x392 1
இலங்கைசெய்திகள்

பிள்ளையானை மேலும் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க உத்தேசம்: அடிப்படை உரிமை மனு நாளை விசாரணைக்கு!

Share

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவர்களை, மேலும் 90 நாட்கள் தடுப்புக் காவலில் (Detention Order) வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளனஇதற்கிடையில், பிள்ளையானின் அடிப்படை உரிமை மீறல் தொடர்பான எழுத்தாணை உத்தரவு மனு (Writ Petition) மீதான விசாரணை இன்று (நவ 01) உயர் நீதிமன்றில் நடைபெறவுள்ளது.

இந்த விசாரணையை முன்னிட்டு, பிள்ளையானின் சட்டத்தரணியும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குச் (CID) சென்று பிள்ளையானைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

அரசாங்கம், பிள்ளையான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து வரும் நிலையில், பிள்ளையானுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதற்கான காரணம் கிழக்கின் பேராசிரியர் ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில்தான் என்று உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் பிள்ளையான் இதுவரை சுமார் ஏழரை மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையில் எவ்வித அடிப்படையும் இல்லை எனவும், இதன் மூலம் தனது உரிமை மீறப்பட்டுள்ளது எனவும் அறிவித்து உத்தரவிடுமாறு கோரி பிள்ளையான் தாக்கல் செய்த எழுத்தாணை மனுவே நாளை உயர் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

 

Share
தொடர்புடையது
25 690416ca1b001
செய்திகள்இலங்கை

வானிலை அறிக்கை: சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

இலங்கையின் சில பகுதிகளில் இன்று (அக்31) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என...

25 6903a9422debc
செய்திகள்உலகம்

சீனா மீதான வரி 57% இலிருந்து 47% ஆகக் குறைப்பு: ட்ரம்ப் அறிவிப்பு – இரு நாட்டு உறவுகள் குறித்து ஜி ஜின்பிங் உறுதி

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற...

images
செய்திகள்இலங்கை

2024 மக்கள் தொகை கணக்கெடுப்பு: மொனராகலை மாவட்டத்தில் அதிகபட்ச எழுத்தறிவு

மக்கள் தொகை மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்டுள்ள 2024 மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகளின்படி, மாவட்டங்களுக்கிடையேயான...

25 6902b801c3b01
செய்திகள்இலங்கை

ஓடுதளம் தேவையில்லாத, AI-இயங்கும் உலகின் முதல் போர் விமானத்தை உருவாக்கியது அமெரிக்கா!

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஒரு தனியார் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய உலகின்...