25 69020810f343e
ஏனையவை

கல்கிசை நீதிமன்று: அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்த சிறைக்கைதியின் செயல்.

Share

நீதிமன்றத்தின் வேண்டுகோளின் பேரில் இன்று (29) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தின் களஞ்சிய அறையை சுத்தம் செய்ய வந்த ஒரு கைதி, நீதிமன்ற வழக்கு கோப்பிலிருந்து 9 மிமீ தோட்ட இல்லாத துப்பாக்கியை திருடிச் சென்றுள்ளார்.

மூன்று கைதிகள் சிரமதானத்திற்காக வந்ததாகவும், அவர்களில் ஒருவர் இந்த துப்பாக்கியைத் திருடிச் சென்றதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில், சிரமதானத்தை முடித்துக்கொண்டு, சிறைச்சாலைக்குச் செல்வதற்காக கைதிகள் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

அதன்போது, சிறைச்சாலைப் பேருந்தில் இருந்த சிறை அதிகாரிகள், மேற்கூறிய நபர் ஒரு பார்சலை எடுத்துச் செல்வதைக் கவனித்துள்ளனர், அதைச் சோதித்தபோது, ​​மேற்கூறிய துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
துப்பாாக்கியை கண்டுபிடித்த பின்னர் சிறைச்சாலைப் பேருந்து நீதிமன்றத்திற்குத் திரும்பிச் சென்று நீதிமன்றத்தின் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவலை தெரிவித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...

26 6960cb1db7fc8
ஏனையவை

கிரீன்லாந்து விவகாரம்: நேட்டோவின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் நகர்வு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை இணைப்பதில் காட்டி வரும் தீவிரம், இரண்டாம் உலகப் போருக்குப்...