images 1 9
செய்திகள்இலங்கை

கென்யாவில் சிறிய ரக விமானம் விபத்து: 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

Share

கென்யாவின் கடற்கரைப் பகுதியிலிருந்து பயணித்த ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து ஆணையம் (Kenya Civil Aviation Authority) தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

 

சுற்றுலாத் தலமான டயானியிலிருந்து, மாசாய் மாரா தேசியப் பூங்காவில் அமைந்துள்ள கிச்வா டெம்போ (Kichwa Tembo) என்ற தனியார் விமான ஓடுபாதைக்குச் செல்லும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

 

நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை உள்ளூர் நேரப்படி 5:30 மணியளவில் (0230 GMT) விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துக்கான காரணத்தை நிறுவ, அரசு நிறுவனங்கள் ஏற்கனவே சம்பவ இடத்தில் இருப்பதாகவும், மேலதிக விவரங்களைத் தற்போது தெரிவிக்க முடியாது என்றும் விமானப் போக்குவரத்து ஆணையகம் கூறியுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம், மருத்துவ அரசு சாரா நிறுவனமான அம்ரெஃப் (AMREF)-க்கு சொந்தமான ஒரு இலகுரக விமானம் தலைநகர் நைரோபியின் புறநகரில் விபத்துக்குள்ளானது. அந்தச் சம்பவத்தில் ஆறு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இரண்டு பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
kalani
இலங்கை

களனி கங்கையில் சிறிய வெள்ள அபாயம்.

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம், களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து...

Maithripala Sirisena
இலங்கை

உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மைத்திரி – ஹேமசிறி பெர்னாண்டோ நீதிமன்றில் தெரிவிப்பு.

நேற்று, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்...

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...