images 1 9
செய்திகள்இலங்கை

கென்யாவில் சிறிய ரக விமானம் விபத்து: 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

Share

கென்யாவின் கடற்கரைப் பகுதியிலிருந்து பயணித்த ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து ஆணையம் (Kenya Civil Aviation Authority) தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

 

சுற்றுலாத் தலமான டயானியிலிருந்து, மாசாய் மாரா தேசியப் பூங்காவில் அமைந்துள்ள கிச்வா டெம்போ (Kichwa Tembo) என்ற தனியார் விமான ஓடுபாதைக்குச் செல்லும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

 

நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை உள்ளூர் நேரப்படி 5:30 மணியளவில் (0230 GMT) விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துக்கான காரணத்தை நிறுவ, அரசு நிறுவனங்கள் ஏற்கனவே சம்பவ இடத்தில் இருப்பதாகவும், மேலதிக விவரங்களைத் தற்போது தெரிவிக்க முடியாது என்றும் விமானப் போக்குவரத்து ஆணையகம் கூறியுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம், மருத்துவ அரசு சாரா நிறுவனமான அம்ரெஃப் (AMREF)-க்கு சொந்தமான ஒரு இலகுரக விமானம் தலைநகர் நைரோபியின் புறநகரில் விபத்துக்குள்ளானது. அந்தச் சம்பவத்தில் ஆறு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இரண்டு பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
24 669df6417f6df
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது – மூன்று பேர் சிக்கினர்

திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது – மூன்று பேர் சிக்கினர சுமார்...

images 3 3
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: மூளையாகச் செயல்பட்ட இஷாரா செவ்வந்திக்கு உதவியதாக பெண் சட்டத்தரணி கைது

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலைக்கு மூளையாகச் செயற்பட்டதாகக் கருதப்படும் இஷாரா...

images 3 2
இலங்கைசெய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விரைவில்: 2026 வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன் சார்ந்ததாக அமையும் என எதிர்பார்ப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, மாகாண சபைத் தேர்தலை இயலுமானவரை...

24112021 capsized ferry reuters
செய்திகள்இலங்கை

கிண்ணியா புதிய படகுப் பாதை தொடக்க விழாவில் விபத்து: கடலில் கவிழ்ந்த பொக்லைன் இயந்திரம்!

கிண்ணியா – குறிஞ்சாக்கேணிக்கு இடையேயான புதிய படகுப் பாதை சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வின் போது...