9 19
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிறுவர்கள் திறன்பேசி பயன்படுத்துவதற்கு தடை!

Share

இலங்கையில் சிறுவர்கள் திறன்பேசிகள் அல்லது ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவதனை தடை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜினி போல்ராஜ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பன்னிரெண்டு வயதுக்கும் குறைந்த சிறுவர்கள் திறன்பேசி பயன்படுத்துவதனை தடை செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் அது குறித்த திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் பங்கேற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அமைச்சர் சரோஜினி போல்ராஜ் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

12 வயதுக்கும் குறைந்த சிறுவர்கள் கையடக்கத் தொலைபேசிகளை வைத்திருப்பதனையும், பயன்படுத்துவதனையும் தடை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியா போன்ற சில நாடுகளில் ஏற்கனவே திறன்பேசிகளை சிறுவர்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...

18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...