received 3346662718994367
செய்திகள்இலங்கை

விசுவமடு மாவீரர் துயிலும் இல்ல சிரமதானப் பணிக்கு இராணுவத்தினர் இடையூறு – நிர்வாகத்தினர் கோரிக்கை

Share

முல்லைத்தீவு, விசுவமடுவில் உள்ள தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாண்டு மாவீரர் நாள் நிகழ்வுகளை அனுஷ்டிப்பதற்காக நேற்று (26.10.2025) ஆரம்பிக்கப்பட்ட சிரமதானப் பணிகளுக்கு இலங்கை இராணுவத்தினர் இடையூறு விளைவித்துள்ளனர்.

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து சிரமதானப் பணிகள் தொடங்கப்பட்டு, துயிலும் இல்லத்தின் முன்பகுதியில் வேலி அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. துயிலும் இல்ல வளாகத்தின் ஒரு பகுதி இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள நிலையில், வேலி அமைக்கும் பணிகள் இராணுவ முகாமுக்கு அருகில் இடம்பெற்றபோது, அங்கு வந்த இராணுவத்தினர், அப்பகுதியில் வேலி கம்பங்களை அமைக்க வேண்டாம் எனத் தெரிவித்து இடையூறு அளித்துள்ளனர்.

இராணுவத்தின் இடையூறையும் மீறி, துயிலும் இல்ல நிர்வாகத்தினர் குறித்த பகுதிக்கான வேலி அமைக்கும் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ,ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்களையில் . இவ்வாண்டு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற அனைத்து சிரமதானப் பணிகளும் ஏனைய ஏற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இந்தப் பணிகளுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தற்போது மிக நெருக்கடியான சூழ்நிலையிலேயே மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருவதாகவும், எனவே, இந்த அரசாங்கமாவது மாவீரர் துயிலும் இல்ல காணியை முழுமையாக விடுவித்துத் தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 213
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெதுரு ஓயா துயரம்: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு – அனைத்து உடல்களும் மீட்பு!

குருநாகல், கோபேகானே பகுதியில் உள்ள தெதுரு ஓயாவில் நீராடச் சென்றபோது நீரில் மூழ்கி மாயமானவர்களில் எஞ்சியிருந்த...

world 212
செய்திகள்அரசியல்இலங்கை

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கை வருகை!

இந்தியத் துணை ஜனாதிபதி திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக எதிர்வரும்...

world 211
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ரூபவாஹினி கூட்டுத்தாபன முறைகேடு வழக்கு: சரத் கொங்கஹகே உள்ளிட்ட இருவருக்குப் பிணை!

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு (SLRC) நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அதன்...

world 210
உலகம்செய்திகள்

அமெரிக்கா – ஈரான் இடையே விரைவில் அமைதி ஒப்பந்தம்? டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 10 நாள்...