images 8
செய்திகள்இந்தியா

இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனம் Meta உடன் இணைந்து AI துறையில் நுழைவு: ‘Reliance Intelligence’ தொடங்கப்படுகிறது!

Share

செயற்கை நுண்ணறிவு (AI) தற்போது பல துறைகளிலும் கால்பதித்து, ChatGPT மற்றும் Gemini போன்ற நிறுவனங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. பணிகளை விரைவாகவும் துல்லியமாகவும் மேற்கொள்வதற்காக AI பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவின் மிகப் பெரிய தொழில் நிறுவனமான ரிலையன்ஸும் (Reliance) தற்போது AI துறையில் தடம் பதித்துள்ளது.

ரிலையன்ஸ், ‘Reliance Intelligence’ என்ற பெயரில் புதிய AI நிறுவனத்தைத் தொடங்கியுள்ளது.

இந்த நிறுவனத்தில் Reliance 70% பங்குகளையும், Meta (Facebook-இன் தாய் நிறுவனம்) 30% பங்குகளையும் வைத்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக, இரு நிறுவனங்களும் சேர்ந்து ரூ.855 கோடி முதலீடு செய்ய உள்ளன.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த AI முயற்சி இந்தியாவில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...