25 68fa9219d9e29 1
செய்திகள்உலகம்

ஜெர்மனியில் குழப்பம்: ராணுவப் பயிற்சி குறித்த தகவல் இல்லாததால், ராணுவ வீரரை சுட்டுக் காயப்படுத்திய காவல்துறை!

Share

ஜெர்மனியின் பவேரியா மாகாணத்தில் உள்ள மியூனிக் நகரில், பொதுமக்கள் முகமூடி அணிந்த சிலர் கட்டிடங்களுக்குள் சென்று பதுங்குவதைக் கண்டதால் காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினரை நோக்கி முகமூடி அணிந்தவர்கள் சுட, காவல்துறையினரும் திருப்பிச் சுட, ஒருவர் காயமடைந்தார்.

பின்னர், பொதுமக்கள் முகமூடிக் கொள்ளையர்கள் என்று நினைத்தவர்கள் உண்மையில் ராணுவ வீரர்கள் என்பது தெரியவந்தது. ராணுவம் “Marshal Power 2025” என்று பெயரிடப்பட்ட ஒரு பெரிய அளவிலான பயிற்சிக்குத் திட்டமிட்டிருந்தது.

இந்த ஒத்திகையில் 500 ராணுவ வீரர்கள், 300 காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் பங்கேற்கவிருந்தனர். ஆனால், அந்த நடவடிக்கையைப் பற்றி பொதுமக்களுக்கோ அல்லது உள்ளூர் காவல்துறையினருக்கோ எந்தத் தகவலும் அளிக்கப்படவில்லை.

இதனால், முகமூடி அணிந்த ராணுவ வீரர்களைப் பொதுமக்கள் கொள்ளையர்கள் என நினைத்து உள்ளூர் காவல்துறையினரை அழைத்துள்ளனர்.

காவல்துறையினரைக் கண்ட முகமூடி அணிந்த ராணுவ வீரர்கள், இதுவும் ஆபரேஷனின் ஒரு பகுதியென நினைத்து, அவர்களை நோக்கி வெற்று குண்டுகளைச் (Blank Rounds) சுட்டுள்ளனர். தங்களைத் நோக்கி முகமூடி அணிந்தவர்கள் சுட்டதால், காவல்துறையினர் உண்மையாகவே அவர்களை நோக்கிச் சுட, ஒரு ராணுவ வீரர் காயமடைந்தார்.

மொத்தத்தில், ராணுவ வீரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, மக்கள் அதிர்ச்சியடைந்து அப்பகுதியில் பெரும் குழப்பம் நிலவியது.

Share
தொடர்புடையது
Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...

Untitled 101
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வத்தளை நாயக்ககந்த பாடசாலையில் புதிய முதல்வர் நியமனத்திற்கு எதிர்ப்பு போராட்டம்!

வத்தளை, நாயக்ககந்த பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க மகளிர் பாடசாலையான பாலிகா மகா வித்தியாலயத்திற்கு (குட்...

Untitled 100
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: ஈரானின் மஷ்ஹத் நகரில் ரயில் சேவைகள் அதிரடி நிறுத்தம்!

ஈரானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான மஷ்ஹத்தின் (Mashhad) ஆளுநர், அந்த நகரில் உள்ள...

Untitled 99
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம்: தட்டுப்பாடின்றி வழங்க அமைச்சர் உறுதி!

உலகளாவிய சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் உயர்விற்கு இணையாக, இலங்கையிலும் உள்நாட்டு எரிவாயு விலைகள்...