25 68f95d9f05e86
செய்திகள்அரசியல்இலங்கை

2026 மாகாண சபை தேர்தல்கள் காலவரையின்றி ஒத்திவைப்பு: கட்சிக்குள் ஆழமான கலந்துரையாடல்கள் காரணம்!

Share

அடுத்த ஆண்டு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த மாகாண சபைத் தேர்தல்களைக் காலவரையின்றிப் பிற்போடுவதற்கு அரசாங்கம் அதிகாரப்பூர்வமற்ற முடிவை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் வெளியான தகவல்களின்படி, தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் மாகாண சபைத் தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்து ஜனவரி மாதம் ஜனாதிபதி அநுரவால் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

மேலும், மாகாண சபைத் தேர்தல்களை மூலோபாய ரீதியான இலக்காகக் கொண்டு, 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை முன்வைக்க அரசாங்கம் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான கே.டி. லால்காந்தவும் கூட, அடுத்த ஆண்டு மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அறிவித்திருந்தார்.

இருப்பினும், கடந்த வாரம் ஜே.வி.பிக்குள் (NPP) நடைபெற்ற விரிவான பல சுற்று கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, மாகாண சபைத் தேர்தல்களைக் காலவரையின்றிப் பிற்போடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கலந்துரையாடல்களின் போது, மாகாண சபை முறைமை, வடக்கு, கிழக்குக்கான அரசியல்தீர்வு மற்றும் அதிகாரப் பகிர்வுப் பொறிமுறை குறித்த ஜே.வி.பி.யின் நிலைப்பாடு ஆகியவை ஆழமாக ஆராயப்பட்டன.

இந்த முக்கியமான விடயங்களில் இறுதி முடிவு எட்டப்படும் வரை தேர்தலை ஒத்திவைக்க யோசனை முன்வைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
Dead Body 1200px 22 12 18
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு – நிமோனியா தொற்றால் மரணம் என தகவல்!

யாழ்ப்பாணம், கைதடி மத்தி, கைதடியைச் சேர்ந்த சிவபாலசிங்கம் காந்தரூபன் (வயது 42) என்ற ஒரு பிள்ளையின்...

24 66eb36e41bb99 md
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணத்தில் 13 நாட்களே ஆன ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு: உடற்கூற்றுப் பரிசோதனையில் காரணம் வெளிச்சம்!

யாழ்ப்பாணம் (Jaffna), அல்வாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த தம்பதிகளின், பிறந்து 13 நாட்களேயான ஆண் குழந்தை...

25 68f9483b692e2
செய்திகள்இலங்கை

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை தேவை: சிறைச்சாலை ஆணையர் ஜகத் வீரசிங்கவின் ஆவேச உரை!

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் என்று சிறைச்சாலை ஆணையர் ஜகத் வீரசிங்க வலியுறுத்தியுள்ளார். இவர் நாவலப்பிட்டியில்...

images 1 5
செய்திகள்உலகம்

போர் நிறுத்தம் பின்னணியிலும் நெருக்கடி: கனடா, பிரான்ஸ் உட்பட பல நாடுகளும் நெதன்யாகுவை கைது செய்ய தயார்!

இஸ்ரேல் – காசா போரில் அமெரிக்காவின் தலையீட்டால் தற்போது அமைதி ஒப்பந்தம் (போர் நிறுத்தம்) ஏற்படுத்தப்பட்டுள்ள...