MixCollage 22 Oct 2025 09 19 AM 8391
பொழுதுபோக்குசினிமா

ஓராண்டுக்குப் பிறகு மகளின் முகத்தை வெளிப்படுத்திய தீபிகா – ரன்வீர் ஜோடி

Share

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே, பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கைக் காதலித்து 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, தீபிகா படுகோனே கடந்த ஆண்டு கர்ப்பமானார். அவர்களுக்குச் சரியாக செப்டம்பர் 9 ஆம் திகதி அன்று பெண் குழந்தை பிறந்தது.

தீபிகா படுகோனே – ரன்வீர் சிங் தம்பதி தங்களுக்குப் பிறந்த அந்தக் குழந்தைக்கு துவா படுகோனே சிங் (Dua Padukone Singh) எனப் பெயரிட்டனர்.

இந்நிலையில், குழந்தை பிறந்து ஓராண்டுக்குப் பிறகு, தங்களது பெண் குழந்தையின் முகத்தை வெளி உலகத்துக்குத் தீபிகா படுகோனே – ரன்வீர் சிங் ஜோடி அறிமுகப்படுத்தியுள்ளனர்.

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களைத் தீபிகா படுகோனே – ரன்வீர் சிங் ஜோடி இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Share
தொடர்புடையது
24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...

22 14
பொழுதுபோக்குசினிமா

மும்பையிலுள்ள இரண்டு சொகுசு வீடுகளை விற்பனை செய்தார் நடிகர் பிரபுதேவா: ரூ. 14.80 கோடிக்கு ஒப்பந்தம்!

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் எனப் பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா, தற்போது தென்னிந்திய மற்றும் பாலிவுட்...

21 15
சினிமாபொழுதுபோக்கு

சினிமா நடிகைகள் குறித்து அரசியல்வாதிகளின் அவதூறு பேச்சு: நடிகை குஷ்பு கடும் கண்டனம்!

அண்மைக் காலமாக அரசியல் மேடைகளில் பெண் திரைக்கலைஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அரசியல் தலைவர்கள் கொச்சையாகப் பேசி...