image 1000x630 10
இலங்கைசெய்திகள்

மன்னார் காற்றாலை மின்னுற்பத்திக்கு எதிரான ஐவருக்குமான தடையுத்தரவு நீட்டிப்பு

Share

மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி நிலைய செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஐந்து பேருக்கு எதிராக மன்னார் நீதவான் நீதிமன்றம் பிறப்பித்திருந்த தடையுத்தரவு, மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, மன்னார் நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியது. அதன்படி, சந்தேகநபர்கள் ஐந்து பேருக்குமான தடையுத்தரவு எதிர்வரும் 29 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஏழு காற்றாலை கோபுரங்களை அமைப்பதற்காக மண் அகழும் காலத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மன்னார் தீவை அண்மித்த பகுதியில் புதிய காற்றாலை கோபுரங்களை அமைப்பதற்கான மண் பரிசோதனைக்குச் சென்றவர்களுக்குப் பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பேசாலை காவல்துறையினரால் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, குறித்த நபர்களுக்கு எதிராக முன்னர் தடையுத்தரவு பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 12 1
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி அரசாங்கம் நகர்த்துகிறது” – ஊடக ஒடுக்குமுறை குறித்து சஜித் பிரேமதாச கடும் சாடல்!

தற்போதைய அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை நசுக்கி, கருத்துச் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை இடுவதன் மூலம் நாட்டை ஒரு...

25 694cd6294202f
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்கரைப்பற்று – திருகோணமலை சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 12 பயணிகள் காயம்!

அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த சொகுசு பயணிகள் பேருந்து இன்று காலை விபத்துக்குள்ளானதில் 12 பேர்...

image 81ddc7db66
செய்திகள்உலகம்

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் குண்டுவெடிப்பு: இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர் பலி!

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற சக்திவாய்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர்...

24 6639eb36d7d48
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குளியாப்பிட்டியவில் 9 நாட்களாகக் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு: காணியில் புதைக்கப்பட்ட அதிர்ச்சிப் பின்னணி!

குளியாப்பிட்டிய, தும்மோதர பிரதேசத்தில் ஒன்பது நாட்களாகக் காணாமல் போயிருந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவர், காணியொன்றில்...