image 1000x630 1
இலங்கைபிராந்தியம்

தனிநபர் தரவு பாதுகாப்பு திருத்தச் சட்டம் ஒக்டோபர் 21 அன்று நாடாளுமன்றில் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பு

Share

குழுநிலையில் திருத்தங்களுடன் கூடிய தனிநபர் தரவு பாதுகாப்பு திருத்தச் சட்டம், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு இன்று (அக்டோபர் 17) அறிக்கை ஒன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளது.

அமைச்சரவையின் அங்கீகாரத்துடன், தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்தும் சட்டமூலம், 2025 ஜூன் மாதம் 03 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்பு விவாதத்தில் நிறைவேற்றப்பட்டது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வேண்டுகோளின் பேரில், சட்டவரைஞர் திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கலந்தாலோசித்து, குழுநிலையில் முன்மொழியப்பட வேண்டிய பல சிறிய திருத்தங்களை அடையாளம் கண்டுள்ளது.

அதன்படி, அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட இந்தத் திருத்தங்கள், ஒக்டோபர் 21 ஆம் திகதி எந்த விவாதமும் இன்றி குழுநிலையின்போது நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டதன் பின்னர், சட்டமூலம் மூன்றாவது முறையாக வாசிக்கப்பட்டு அதே நாளில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜும்ஆ பிரசங்கங்களின் போது நிதானத்தைப் பேணுமாறு உலமாக்களுக்கு அறிவுறுத்தல்!

நாட்டின் தற்போதைய சூழல் மற்றும் சர்வதேச விவகாரங்களைக் கருத்திற்கொண்டு, ஜும்ஆ பிரசங்கங்களின் போது கதீப்மார்கள் மற்றும்...

world 55
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு விசேட போக்குவரத்துத் திட்டம் ஆரம்பம்: கொழும்பிலிருந்து 2,300 மேலதிக பேருந்துகள் சேவையில்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக விசேட...

world 54
செய்திகள்இலங்கை

நெதன்யாகு மீதான ஊழல் வழக்கு மீண்டும் தொடக்கம்; ஈரானின் கடும் விமர்சனம்!

இஸ்ரேலில் ஈரான் உடனான போர் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த அவசரநிலை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...