image 1000x630 1
இலங்கைபிராந்தியம்

தனிநபர் தரவு பாதுகாப்பு திருத்தச் சட்டம் ஒக்டோபர் 21 அன்று நாடாளுமன்றில் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பு

Share

குழுநிலையில் திருத்தங்களுடன் கூடிய தனிநபர் தரவு பாதுகாப்பு திருத்தச் சட்டம், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு இன்று (அக்டோபர் 17) அறிக்கை ஒன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளது.

அமைச்சரவையின் அங்கீகாரத்துடன், தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்தும் சட்டமூலம், 2025 ஜூன் மாதம் 03 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்பு விவாதத்தில் நிறைவேற்றப்பட்டது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வேண்டுகோளின் பேரில், சட்டவரைஞர் திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கலந்தாலோசித்து, குழுநிலையில் முன்மொழியப்பட வேண்டிய பல சிறிய திருத்தங்களை அடையாளம் கண்டுள்ளது.

அதன்படி, அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட இந்தத் திருத்தங்கள், ஒக்டோபர் 21 ஆம் திகதி எந்த விவாதமும் இன்றி குழுநிலையின்போது நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டதன் பின்னர், சட்டமூலம் மூன்றாவது முறையாக வாசிக்கப்பட்டு அதே நாளில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
22 61ea2c4754d53
இலங்கைசெய்திகள்

தென் கொரியப் புலம்பெயர் இலங்கையர் உதவி: 48 மணி நேரத்தில் திரட்டப்பட்ட ரூ. 38.43 மில்லியன் நிவாரண நிதி பிரதமரிடம் கையளிப்பு!

தென் கொரியாவில் தொழில்புரியும் இலங்கையர்களால் திரட்டப்பட்ட 38.43 மில்லியன் ரூபாய் பெறுமதியான நிதி, இலங்கையில் அனர்த்தத்தால்...

image 2589f1a804
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மையத்திலிருந்து கொழும்புக்கு 73,000 கிலோகிராம் மரக்கறிகள் அனுப்பப்பட்டன: விலைகள் குறித்த விபரம் உள்ளே!

நுவரெலியா பொருளாதார மையத்திலிருந்து இன்று (09) சுமார் 73,000 கிலோகிராம் மரக்கறிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

articles2FD806QCvPd8dQkzGUvxWn
அரசியல்இலங்கைசெய்திகள்

பேரிடர் மீட்புப் பணிகளுக்கு உதவ பிரான்ஸ் உறுதி: நிபுணர் குழுவை அனுப்பத் திட்டம்!

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட்...

25 6938327ee8d9f
இலங்கைசெய்திகள்

பதுளை மாவட்டத்தில் மீண்டும் கனமழை: மக்கள் தற்காலிக முகாம்களிலேயே தங்குமாறு மாவட்டச் செயலாளர் அறிவுறுத்தல்!

பதுளை மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 9) காலை முதல் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளதால், மாவட்ட...