இலங்கையில் அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய 2025 ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது இரண்டாவது காலாண்டில் நாட்டில் தனியார் துறை ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், அரச ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 200,000 குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் காலாண்டில் நாட்டில் அரச ஊழியர்களின் எண்ணிக்கை 1,302,185 ஆகவும், இரண்டாவது காலாண்டில் 1,165,094 ஆகவும் குறைந்துள்ளதாக திணைக்களத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முதல் காலாண்டில் நாட்டில் தனியார் துறை ஊழியர்களின் எண்ணிக்கை 3,808,235 ஆகவும், இரண்டாவது காலாண்டில் 3,814,313 ஆகவும் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும், முதல் காலாண்டில் 8,461,936 ஆக இருந்த நாட்டில் பொருளாதார ரீதியாக இயங்கும் மக்கள் தொகை, இரண்டாவது காலாண்டில் 8,491,296 ஆக அதிகரித்துள்ளது.
ஆனால் நாட்டில் பொருளாதார ரீதியாக இயங்கும் மக்கள் தொகையை விட செயலற்ற மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.