6 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் தங்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு – 3 இலட்சம் பேர் ஆபத்தில்

Share

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 4,000 அமெரிக்க டொலர்கள் என்ற சாதனை அளவைத் தாண்டியுள்ள நிலையில், இலங்கையில் உள்ளூர் தங்கச் சந்தை சடுதியாக வீழ்ச்சி அடையும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.

இதன் காரணமாக மூன்று லட்சம் பேருடைய வேலைகள் ஆபத்தில் இருப்பதாக அகில இலங்கை நகைக்கடைக்காரர்கள் சங்கத்தின் செயலாளர் ராமன் பாலசுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.

“உலகளவில் தங்க விலை அதிகரிப்பால் உள்ளூர் தங்கத்தின் தேவை 50 சதவீதத்திற்கு அதிகமாகக் குறைய வாய்ப்புள்ளது.

இந்த நிலைமை நீண்ட காலத்திற்கு தொடர்ந்தால், பல நகைக்கடைக்காரர்கள் தங்கள் பணியாளர்களைக் குறைக்க வேண்டியிருக்கும்.

கொள்வனவாளர்கள் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தால், தற்போதைய பணியாளர்களைப் பராமரிக்க எந்த நியாயமான காரணமும் இல்லை. எனவே, ஆட்குறைப்பு தவிர்க்க முடியாததாகிவிடும்.

இலங்கையின் மிகப்பெரிய பாரம்பரிய வர்த்தகங்களில் ஒன்றான நகைத் தொழில், ஏற்கனவே சுமார் 300,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை வழங்குகிறது.

உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மையே 22 கரட் மற்றும் 24 கரட் தங்கத்தின் விலையில் திடீர் உயர்வுக்கு காரணமாகும்.

இதுபோன்ற சமயங்களில், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான புகலிடங்களைத் தேடுகிறார்கள். தங்கம் மிகவும் நம்பகமான சொத்துக்களில் ஒன்றாகும்.

தங்கத்திற்கான உலகளாவிய தேவை அதிகரிப்பே இந்த சாதனை விலை உயர்வுக்கு முக்கிய காரணம்,” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
18 6
இலங்கைசெய்திகள்

யாழ். போதனாவில் இளம் தாய் பிரசவத்தின் பின் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) இளம் தாய் ஒருவர் பிரசவத்தின் பின் உயிரிழந்துள்ளார்....

19 5
இலங்கைசெய்திகள்

தையிட்டி விகாரை பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி – உறுதி அளித்த அநுர அரசின் அமைச்சர்

தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு இன்னும் ஓரிரு வாரங்களில் சிறந்த தீர்வு முன்வைக்கப்படுமென்று சபை முதல்வரும்...

17 6
இலங்கைசெய்திகள்

மாற்றம் செய்யப்பட்டது அநுர அரசாங்கத்தின் அமைச்சரவை..

புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் சிலர் பதவியேற்றனர். அதன்படி, அமைச்சர்களாக பிமல் ரத்நாயக்க –...

16 6
இலங்கைசெய்திகள்

அரசு ஊழியர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

இலங்கையில் அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல்...