இலங்கைசெய்திகள்

உத்தரவை மீறி சென்ற கார் மீது பொலிஸார் சரமாரியாக துப்பாக்கிச் சூடு

Share

மாத்தறையில் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டிச் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

மாத்தறை, வெல்லமடம பகுதியில் வீதி தடையை மீறி சென்ற காரை நிறுத்துமாறு பொலிஸார் மறித்துள்ளனர். எனினும் உத்தரவை மீறி கார் தொடர்ந்து பயணித்துள்ளது.

இதன்போது ​​பொலிஸ் அதிகாரிகள் காரை நோக்கி பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டிச் சென்ற கார், மாத்தறை, ஜனராஜா மாவத்தையில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரில் இரண்டு பேர் பயணித்த நிலையில் காரை நிறுத்திவிட்டு இருவரும் தப்பி ஓடியுள்ளனர்.

இந்த நிலையில் காரின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share
தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...