12 8
இலங்கைசெய்திகள்

இந்த ஆண்டில் இதுவரையில் 425 பெண்களுக்கு சிறைத்தண்டனை

Share

இந்த ஆண்டில் இதுவரையில் 425 பெண்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 31 வரை மொத்தம் 425 பெண்கள் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

மேலும், அதே காலப்பகுதியில் 4,686 பெண்கள் சந்தேகத்தின் பேரில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனுடன், பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக மேலும் 38 பெண்களும் இந்த ஆண்டில் சிறை தண்டனை பெற்றுள்ளனர் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.

அரசு தற்போது பெண் குற்றவாளிகள் மற்றும் ரிமாண்ட் கைதிகளின் நலன், மறுசீரமைப்பு மற்றும் சட்ட உதவி நடவடிக்கைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...