4 9
இலங்கைசெய்திகள்

போதைப் பொருட்களை அடையாளம் காண புதிய அதிகாரிகள் நியமனம்

Share

போதைப் பொருட்களை அடையாளம் காண்பதற்கான புதிய இரசாயன பகுப்பாய்வாளர்கள் 50 பேர் புதிதாக இணைத்து கொள்ளப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

சிறைக் கைதிகளின் வழக்குகள் தொடர்பான பகுப்பாய்வு அறிக்கைகளில் ஏற்படும் தாமதத்தைத் தடுக்கவே இவ்வாறு ஐம்பது அரச இரசாயன பகுப்பாய்வாளர்கள் விரைவில் அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு நியமிக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

போதைப்பொருள் வழக்குகளில் சந்தேக நபர்கள் பயன்படுத்தும் போதை வகைகளை முறையாக அடையாளம் காண அரச பகுப்பாய்வாளரின் உதவி கோரப்படுகிறது, மேலும் அந்த அறிக்கைகளில் தாமதம் ஏற்படுவதற்கான காரணம் அரச பகுப்பாய்வாளர்களின் பற்றாக்குறையாகும்.

அரசு பகுப்பாய்வாளர் அறிக்கைகளை விரைவுபடுத்த இந்த அதிகாரிகள் புதிதாக நியமிக்கப்பட வேண்டும் என்று கருதப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

சிறைச்சாலைகளில் நெரிசல் அதிகரிப்பதற்கும் பகுப்பாய்வு அறிக்கைகளில் ஏற்படும் தாமதமே காரணம் என கடந்த காலங்களில் தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
20 2
இந்தியாசெய்திகள்

கரூர் துயரம் – ஆட்டம் காணும் த.வெ.க..! சி.பி.ஐ விசாரணையை கோரிய மோடி தரப்பு

தவெக தலைவர் விஜயின் கரூர் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...

19 2
இலங்கைசெய்திகள்

யாழில் கைதான பெண் சட்டத்தரணி – வடக்கில் வெடித்த போராட்டம்

உரிய வகையில் தேடுதல் ஆணை இல்லாது காவல்துறையினரால் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து...

18 3
இலங்கைசெய்திகள்

சிறிலங்காவின் போர்குற்றங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை அறிவித்த ஐ.நா

இலங்கை தொடர்பான மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களை சேகரிக்கும் திட்டத்தை...

17 3
இலங்கைசெய்திகள்

மகிந்தவின் பாதுகாப்பு! நிலைப்பாட்டை அறிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பில் எவ்வித குறைப்பும் செய்யப்பட்டவில்லை. அவர்கள் கோரும் பாதுகாப்பு வழங்கப்படும்...