5 9
இலங்கைசெய்திகள்

வெளிநாடுகளுக்குச் செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

Share

வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு அவர்களுக்கு ஏற்படும் ஆபத்து குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களிடம் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் பொதிகளை வழங்குமாறு கூறினால் அதனை பெற்றுக் கொள்வதனை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

குவைத் செல்ல எதிர்பார்த்திருந்த பயணி ஒருவர் எதிர்கொண்ட சம்பவத்தையடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குவைத் செல்ல எதிர்பார்த்தவருக்கு அறிமுகமான ஒருவர் பொதி ஒன்றை வழங்கி அதனை குவைத்தில் உள்ள நண்பரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அதனை உதவியாக செய்ய குறித்த பயணியும் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த நிலையில் பொதியில் என்ன உள்ளதென ஆராய்வதற்கு குவைத் செல்ல காத்திருந்த பயணியின் மனைவி நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதனை திறந்து பார்த்த போது அதில் இருந்து பெருந்தொகை போதைப்பொருள் கண்டுபிக்கப்பட்டுள்ளது.

இதனை ஆராயாமல் கொண்டு சென்றிருந்தால் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருக்கலாம்.

இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் போதும் வெளிநாடுகளுக்கு செல்லும் போதும் இவ்வகையாக பொதிகளை பெற்றுக்கொள்வதனை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...