9 4
இலங்கைசெய்திகள்

விவசாயிகளுக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல்

Share

உள்நாட்டு உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் மற்றும் சிவப்பு வெங்காயத்தை விவசாயிகளிடமிருந்து நியாயமான விலையில் வாங்குவதற்கு லங்கா சதோச மற்றும் நாட்டின் இரண்டு பிரபலமான வணிகக் குழுக்களான கார்கில்ஸ் மற்றும் கீல்ஸ் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க வெளியிட்டுள்ளார்.

அதன்படி, இந்த நிறுவனங்கள் ஒரு கிலோ உருளைக்கிழங்கை ரூ.210க்கும், ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை ரூ.130க்கும், ஒரு கிலோ சிவப்பு வெங்காயத்தை ரூ.225க்கும் வாங்குவதற்கு ஒப்புக் கொண்டுள்ளன.

விவசாயிகளிடமிருந்து இந்தப் பொருட்களைக் கொள்முதல் செய்வது இன்று (02) முதல் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நிறுவனங்களுக்கு ஒரு விவசாயி 2,000 கிலோகிராம் வரை வழங்க முடியும் என்றும் அமைச்சர் வசந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
23 7
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்ச் சூழல்: கைவிடப்படும் ஆயிரக்கணக்கான செல்லப்பிராணிகள் – ‘மறைக்கப்பட்ட பலிகள்’ என எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர்ச் சூழலால், மக்கள் இடம்பெயர்வது...

22 10
உலகம்செய்திகள்

ஈரானுடனான போர்: முதல் ஆறு நாட்களில் 11 பில்லியன் டாலர் செலவு – அமெரிக்க செனட்டர் தகவல்!

ஈரானுடனான மோதலின் முதல் ஆறு நாட்களில் அமெரிக்காவிற்கு குறைந்தது 11 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகியுள்ளதாக...

21 10
செய்திகள்உலகம்

பூமியின் வளிமண்டலத்தை நோக்கி வரும் நாசாவின் ‘வான் ஆலன் ப்ரோப் ஏ’ விண்கலம்!

2012-ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட, 600 கிலோ (1,300 பவுண்டுகள்) எடையுள்ள நாசாவின் ‘வான் ஆலன்...

20 11
செய்திகள்அரசியல்இலங்கை

எரிபொருள் விலை உயர்வு: அரசாங்கத்திற்கு ரூ. 7.1 பில்லியன் கூடுதல் வருமானம் – முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு!

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை உயர்வினால், அரசாங்கம் சுமார் 7.1 பில்லியன் ரூபா மேலதிக வருவாயைப்...