7 3
உலகம்செய்திகள்

டசின் கணக்கானோர்… பாடசாலை கட்டிட விபத்தில் உறுதி செய்த அதிகாரிகள்

Share

இடிந்து விழுந்த இந்தோனேசிய பள்ளியின் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிய 91 மாணவர்களில் எவரும் உயிருடன் இல்லை என்றே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திங்கட்கிழமை சிடோர்ஜோ நகரில் உள்ள இரண்டு மாடி உண்டு உறைவிடப் பள்ளி இடிந்து விழுந்தபோது நூற்றுக்கணக்கான மாணவர்கள், அவர்களில் பெரும்பாலோர் இளம் வயதினர் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

அந்த விபத்தில் குறைந்தது ஐந்து மாணவர்கள் இறந்ததாகவும், சுமார் 100 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், மீட்புப் பணிகள் தொடங்கியதிலிருந்து 13 மாணவர்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டனர், இருப்பினும் இருவர் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

தற்போது, வியாழக்கிழமை, பேரிடர் தணிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், வெப்ப ட்ரோன்களைப் பயன்படுத்தியுள்ள மீட்புப் பணியாளர்கள், இடிபாடுகளில் இருந்து உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகளைக் கண்டறியத் தவறிவிட்டதாகக் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிய 91 மாணவர்களில் எவரும் உயிருடன் இல்லை என்றே அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். விஞ்ஞான ரீதியாக எவரும் உயிருடன் இல்லை என்பதை உறுதி செய்ததன் பின்னர், கனரக கருவிகளைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

ஆனால், இடிபாடுகளுக்கு அடியில் இருந்து இன்னும் அழுகை மற்றும் அலறல் சத்தம் கேட்கிறது என்று அதிகாரிகள் புதன்கிழமை கூறியிருந்தனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பல பாடசாலை வளாகத்தில் காத்திருக்கின்றனர், அவர்களில் பலர் தங்கள் அன்புக்குரியவர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.

 

Share
தொடர்புடையது
Untitled 37
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிஐடி தடுப்புக்காவலில் இருந்த கைதிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்: நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராக கடும் நடவடிக்கை!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘கணேமுல்ல சஞ்சீவ’ படுகொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக...

Untitled 35
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு கிணற்றுப் படுகொலைச் சம்பவங்கள்: பிரதான சூத்திரதாரி கொழும்பில் கைது!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பகுதியில் இடம்பெற்ற அதிர்ச்சியை ஏற்படுத்திய கிணற்றுப் படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய...

Untitled 34
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வறட்சி அதிகரிப்பு: இலங்கையில் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய நிலை என எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக, அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு...

Untitled 32
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதி மோசடியில் ஈடுபட்ட 125 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்!

இலங்கையில் தங்கியிருந்து இணையவழி நிதி மோசடிகளில் (Online Scams) ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 125...