24
இந்தியாசெய்திகள்

“உங்கள் பசிக்கு இன்னும் எத்தனை உயிர்கள்?”: அது போலி கணக்கு – பிரபல நடிகை விளக்கம்

Share

எனது பெயரில் பதிவுகளைப் பரப்பும் ட்விட்டர் கணக்கு போலியானது என்று நடிகை கயாடு லோஹர் விளக்கம் அளித்துள்ளார்.

கரூர் துயர சம்பவம் குறித்து பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை கயாடு லோஹரின் எக்ஸ் தளத்தில் கணக்கில் வெளியான பதிவு எதிர்வினைகளைத் தூண்டியது.

ஏனெனில், அந்த பதிவில் ‘சுயநல அரசியலுக்காக கரூரில் தனது நண்பர்களில் ஒருவரை இழந்ததாகவும், விஜய் உங்கள் நட்சத்திர அந்தஸ்துக்கு மக்கள் துணையாக இல்லை; உங்கள் பசிக்கு இன்னும் எத்தனை உயிர்கள்?’ என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கயாடு தனது உண்மையான எக்ஸ்தள பக்கத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அவர், “எனது பெயரில் பதிவுகளைப் பரப்பும் ட்விட்டர் கணக்கு போலியானது. எனக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை. மேலும் அங்கு வெளியிடப்பட்ட அறிக்கைகள் என்னுடையவை அல்ல. கரூர் பேரணியில் நடந்த துயர சம்பவத்தால் நான் மிகவும் வருத்தமடைந்தேன், மேலும் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இருப்பினும், கரூரில் எனக்கு தனிப்பட்ட நண்பர்கள் யாரும் இல்லை என்பதையும், என் பெயரில் பரப்பப்படும் கதை தவறானது என்பதையும் நான் மிகத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இந்த தவறான தகவலை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம். மீண்டும் ஒருமுறை, துக்கத்தில் இருக்கும் குடும்பங்களுடன் எனது பிரார்த்தனைகள்” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...