20
இந்தியாசெய்திகள்

அடுத்த மாதம் திருமணம்; கரூர் நெரிசலில் உயிரிழந்த புதுப்பெண், மாப்பிள்ளை

Share

தவெக பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், அடுத்த திருமணம் செய்துகொள்ளவிருந்த புதுப்பெண்ணும், மாப்பிள்ளையும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூரைச் சேர்ந்த கோகுலஸ்ரீ என்பவருக்கும், மதுரையைச் சேர்ந்த மதுரையைச் சேர்ந்த ஆகாஷ் என்பவருக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது.

இந்த ஜோடி கரூரில் நடந்த தவெக கூட்டத்தில் பங்கேற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து கோகுலஸ்ரீயின் தாயார் ஊடகத்திடம் பேசும்போது, “சாவதற்காகத்தான் இப்படிப் போனார்களா? கட்சி கட்சின்னு ஏன் எல்லாரையும் உயிரை விட வெக்கறீங்க? கட்சி கட்சின்னு எத்தனை பேரோட குடும்பம் வீதியில நிக்குது?

அடுத்த மாதம் கல்யாணம். ரெண்டு பேருக்குமே 24 வயசுதான் ஆகுது. ரெண்டு பேரும் ரெண்டு மணிவரைக்கும் பேசிட்டுதான் போனாங்க. கரூர்ங்கறனால போனாங்க. மாடிலதான் நிக்கறேன்னு சொன்னாங்க. நானும் கூடத்தான் இருந்தேன்.

இறங்கி வரையிலதான் என் புள்ளைய கொன்னுட்டாங்க. ஆறரை மணிக்கு போன்ல பேசுனோம். கும்பலா இருக்கு வந்துருங்கனு சொன்னோம். செல்பி எடுத்துட்டு வந்துடறேன்னு சொன்னாங்க.

செய்திய பாத்துட்டுதான் நாங்க வந்தோம். என் பையன் தப்பிச்சுக்கிட்டான். புள்ளையும், மாப்பிள்ளையும் போயிட்டாங்க. என் புள்ளைய ஆசை ஆசையா வளர்த்தேன்” என்றார்.

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...