16
உலகம்செய்திகள்

ஈரானின் அணுசக்தி திட்டம்: 71 புதிய தடைகளை அறிவித்த பிரித்தானியா

Share

பிரித்தானிய அரசு ஈரானின் அணுசக்தி திட்டத்துடன் தொடர்புடைய 71 புதிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை தடை பட்டியலில் சேர்த்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மாற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்ட அணுசக்தி தடைகளின் தொடர்ச்சியாக பிரித்தானியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மணி ஆகிய நாடுகள், 2015-ல் ஈரானுடன் கையெழுத்தான அணுசக்தி ஒப்பந்தத்தை மீறியதாக குற்றம்சாட்டி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தடைகளை மீண்டும் கொண்டு வந்துள்ளன.

ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கும் நோக்கம் இல்லை என மறுத்தாலும், பிரித்தானிய அரசு, “அணுசக்தி பரவலை கட்டுப்படுத்த” இந்த புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது.

புதிய தடைகள் ஈரானின் முக்கிய அணுசக்தி அதிகரைகள், நிதி மற்றும் எரிசக்தி நிறுவனங்களை உள்ளடக்கியவை.

இவர்கள் மீது சொத்து முடக்கம், நிதி வரையறைகள் மற்றும் பயணத்தடைகள் விதிக்கப்படும்.

இந்த புதிய தடைகள், ஈரானின் அணுசக்தி திட்டத்தை சர்வதேச அளவில் கட்டுப்படுத்தும் முயற்சியாகவும், பிரித்தானியா தனது வெளிநாட்டு கொள்கையில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளதையும் காட்டுகிறது.

Share
தொடர்புடையது
30
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள்...

29
இலங்கைசெய்திகள்

மகிந்தவை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ரணில்

ரணிலும் நானும் பரஸ்பர மரியாதையை பேணக்கூடிய அரசியல் கலாசாரத்தை கொண்டவர்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

28
இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள் வெளிவருவதைத் தடுக்க அரசாங்கம் சதி! முஜிபுர் ரஹ்மான்

பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிராகரித்ததன் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள்...

27
இந்தியாசெய்திகள்

போனில் பேசிய ராகுல் காந்தி – வீட்டை விட்டு வெளியேறிய விஜய் எங்கே சென்றார்?

36 மணி நேரங்களுக்கு பின்னர் தவெக தலைவர் விஜய் தனது வீட்டை வெளியேறியுள்ளார். கரூரில் தவெக...