14
உலகம்செய்திகள்

கூகிள் வேலைக்கு பலமுறை நிராகரிக்கப்பட்ட இந்திய தொழில்நுட்ப வல்லுநர்.., அவர் கூறும் காரணம்

Share

இந்திய தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் பல முறை கூகிள் வேலைக்கு விண்ணப்பித்தும் நிராகரிக்கப்பட்ட சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

கூகிள், மைக்ரோசாப்ட் அல்லது பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை என்பது பொறியாளர்களுக்கு ஒரு கனவு வேலையாகும். இருப்பினும், அதற்கு ஒரு இருண்ட பக்கமும் உள்ளது.

கூகிள் தயாரிப்பு மேலாளர் பதவியைப் பெற முயற்சித்தபோது பலமுறை நிராகரிக்கப்பட்டதை ஒரு இந்திய தொழில்நுட்ப வல்லுநர் பகிர்ந்து கொண்டார்.

தொழில்நுட்பத் துறையில் பொறியாளர்களை பணியமர்த்துவதில் எதிர்கொள்ளும் சவால்களின் நிலைமையை கூறியுள்ளார்.

ஒரு Reddit பதிவில் இந்திய தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர், கூகிள் தயாரிப்பு மேலாளர் பணிக்கான வேலையைப் பெற முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும் தான் எவ்வாறு மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்பட்டேன் என்பதை விளக்கினார்.

strong profile மற்றும் வேலையைப் பெறுவதில் தனது 100 சதவீதத்தை வழங்கிய போதிலும், நிறுவனம் தனது சுயவிவரத்தை கருத்தில் கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தொழில்நுட்ப வல்லுநர், Tier 1 MBA, Tier 2 engineering degree மற்றும் 100,000 YouTube subscribers ஆகியவற்றிற்கு பிறகும் கூகிள் தயாரிப்பு மேலாளர் பணியைப் பெறுவதில் அவர் வெற்றிபெறவில்லை.

கூகிளுக்கு அவர் தனது விண்ணப்பத்தை அனுப்பும் போது எட்டு வெவ்வேறு பதவிகளுக்கு 3 முதல் 4 மாதங்களுக்கு விண்ணப்பித்தார்.

ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் தனது CV மற்றும் கவர் லெட்டரில் மாற்றங்களைச் செய்தது மட்டுமல்லாமல், ஒவ்வொரு பதவிக்கும் நீண்ட மாதிரிகள் மற்றும் உத்தி ஆவணங்களைத் தயாரித்து, அவற்றை நேரடியாக பணியமர்த்தல் மேலாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். ஆனாலும் ஒவ்வொரு முறையும் நிராகரிக்கப்பட்டார்.

இறுதியாக அவர் கூகிளில் சேர வேறு என்ன செய்ய வேண்டும்? நான் என்ன தவறு செய்கிறேன்? போட்டி அவ்வளவு மோசமாக உள்ளதா? என்று பகிர்ந்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...