8
இலங்கைசெய்திகள்

சுனில் ஹந்துன்னெத்திக்கு சிகிச்சையளிக்க தயார்! அர்ச்சுனா எம்.பி பகிரங்கம்

Share

அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி நோயொன்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு சிகிச்சையளிக்க ஒரு மருத்துவர் என்ற ரீதியில் தான் தயாராக இருப்பதாகவும் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற சமையலறையில் கரப்பான் பூச்சிகள் , எலிகள் நடமாட்டம் இருப்பதாக தெரிவித்து நாடாளுமன்றத்திற்கு பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை நியமிக்கும் செயற்பாடொன்றை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி முன்னின்று மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இருக்கும் பிக் குச்சன் ஒருவர் அடுத்தவர்கள் எதைக் கேட்டாலும் உனக்கு பாணா என்று கேட்பதாகவும் அவ்வாறு தொடர்ச்சியாக கேட்பதன் அர்த்தம் அவர் ஏதோவொரு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதாகும் என்றும் அர்ச்சுனா ராமநாதன் சுட்டிக் காட்டியுள்ளார்.

அவ்வாறான நிலையில், சுனில் ஹந்துன்னெத்திக்கு சிகிச்சையளிக்க ஒரு மருத்துவர் என்ற ரீதியில் தான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களிடம் இருந்து அரசி, வாழைக்குலை, தேங்காய்களை அன்பளிப்பாக பெற்று வாழ்ந்தவர்கள் தற்போது கோடீஸ்வரர்களாகி இருப்பதாகவும் , அவர்களுக்கு தங்களிடமிருந்த அரிசி, தேங்காய் உள்ளிட்டவற்றை அள்ளிக் கொடுத்த பொதுமக்கள் தற்போதைக்கு பஞ்சப் பரதேசிகளாக ஆகியிருப்பதாகவும் அர்ச்சுனா ராமநாதன் தொடர்ந்தும் விமர்சித்துள்ளார்.

தனது தகப்பனார் யாழ்ப்பாணத்தின் பூர்வீக கோடீஸ்வரர் என்பதன் காரணமாக தன்னிடம் 15 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் இருப்பதாகவும், அவற்றில் ஒரு பகுதி தான் மருத்துவத்துறை மூலம் உழைத்துக் கொண்டதாகவும் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...