8
இலங்கைசெய்திகள்

சுனில் ஹந்துன்னெத்திக்கு சிகிச்சையளிக்க தயார்! அர்ச்சுனா எம்.பி பகிரங்கம்

Share

அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி நோயொன்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு சிகிச்சையளிக்க ஒரு மருத்துவர் என்ற ரீதியில் தான் தயாராக இருப்பதாகவும் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற சமையலறையில் கரப்பான் பூச்சிகள் , எலிகள் நடமாட்டம் இருப்பதாக தெரிவித்து நாடாளுமன்றத்திற்கு பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை நியமிக்கும் செயற்பாடொன்றை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி முன்னின்று மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இருக்கும் பிக் குச்சன் ஒருவர் அடுத்தவர்கள் எதைக் கேட்டாலும் உனக்கு பாணா என்று கேட்பதாகவும் அவ்வாறு தொடர்ச்சியாக கேட்பதன் அர்த்தம் அவர் ஏதோவொரு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதாகும் என்றும் அர்ச்சுனா ராமநாதன் சுட்டிக் காட்டியுள்ளார்.

அவ்வாறான நிலையில், சுனில் ஹந்துன்னெத்திக்கு சிகிச்சையளிக்க ஒரு மருத்துவர் என்ற ரீதியில் தான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களிடம் இருந்து அரசி, வாழைக்குலை, தேங்காய்களை அன்பளிப்பாக பெற்று வாழ்ந்தவர்கள் தற்போது கோடீஸ்வரர்களாகி இருப்பதாகவும் , அவர்களுக்கு தங்களிடமிருந்த அரிசி, தேங்காய் உள்ளிட்டவற்றை அள்ளிக் கொடுத்த பொதுமக்கள் தற்போதைக்கு பஞ்சப் பரதேசிகளாக ஆகியிருப்பதாகவும் அர்ச்சுனா ராமநாதன் தொடர்ந்தும் விமர்சித்துள்ளார்.

தனது தகப்பனார் யாழ்ப்பாணத்தின் பூர்வீக கோடீஸ்வரர் என்பதன் காரணமாக தன்னிடம் 15 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் இருப்பதாகவும், அவற்றில் ஒரு பகுதி தான் மருத்துவத்துறை மூலம் உழைத்துக் கொண்டதாகவும் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
1732374016 images 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை: மலைப்பகுதி மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, கண்டி, நுவரெலியா, பதுளை மற்றும் மாத்தளை ஆகிய...

24514649 rain
செய்திகள்விளையாட்டு

இலங்கை – பாகிஸ்தான் டி20 ரத்து செய்யப்பட்ட போட்டியின் நுழைவுச்சீட்டுகள் நாளை செல்லுபடியாகும்!

மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டிக்காக...

AP01 10 2026 000005B
செய்திகள்உலகம்

என்னை விட நோபல் பரிசுக்குத் தகுதியானவர் எவருமில்லை: இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டொனால்ட் ட்ரம்ப் பெருமிதம்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பாரிய போர் அபாயத்தைத் தான் தடுத்து நிறுத்தியதாகவும், அதன் அடிப்படையில்...

06 1
செய்திகள்அரசியல்இலங்கை

2026-ஆம் ஆண்டு இலங்கையின் பாரிய வீட்டு நிர்மாண ஆண்டு: ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பிரகடனம்!

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறிய மக்களுக்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தின் கீழ்,...