1
இலங்கைசெய்திகள்

ஆசிரியையான மனைவியின் அந்தரங்க காணொளியை மாணவனுக்கு அனுப்பிய கணவன்

Share

கொழும்பில் பாடசாலை ஆசிரியை ஒருவரின் அந்தரங்க காணொளியை மாணவர்களுக்கு அனுப்பிய கணவனான சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தனது மனைவியான ஆசிரியையுடன் நெருக்கமாக இருந்து அதனை வீடியோ எடுத்து, அவர் படிப்பிக்கும் பாடசாலை மாணவருக்கு வட்ஸ்அப் செயலி மூலம் அனுப்பியதாக கூறப்படும் சந்தேக நபரை உடனடியாக கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொழும்பு கூடுதல் நீதவான் கசுன் காஞ்சன தசநாயக்க நேற்று உத்தரவிட்டார்.

கொழும்பு மருதானை பகுதியில் உள்ள இளம் ஆசிரியை ஒருவர் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் செய்த முறைப்பாடு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, விசாரணை அதிகாரிகள் சம்பவம் தொடர்பான ஆதாரங்களை சமர்ப்பித்ததை அடுத்து சந்தேக நபரை கைது செய்ய உத்தரவிடப்பட்டது.

தகாத படங்களைப் பார்ப்பதற்கு அடிமையானதாக கூறப்படும் சந்தேக நபர், தனது மனைவியுடனான அந்தரங்க உறவை இரகசியமாக வீடியோ எடுத்ததாகவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முறைப்பாட்டாளரான ஆசிரியைக்கும் சந்தேக நபரான கணவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், கணவன் – மனைவிக்கு இடையிலான உறவு தொடர்பான வீடியோவை வட்ஸ்அப் செயலி மூலம் தனக்கு கீழ் படிக்கும் மாணவருக்கு சங்கடப்படுத்தும் நோக்கில் சந்தேக நபர் அனுப்பியதாகவும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

சந்தேக நபரான கணவர் மனச்சோர்வு எனப்படும் மருத்துவ நிலையில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் மேலும் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.

விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த தகவல்களை பரிசீலித்த நீதவான், சந்தேக நபரின் கணவரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...