3
இலங்கைசெய்திகள்

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் விளக்கமறியலில்

Share

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து படகு ஒன்றில் கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 07 இராமேஸ்வர கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று (01.07.2025) மாலை உத்தரவிட்டுள்ளார்.

இராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து நேற்று (30) கடற்றொழில் ஈடுபட சென்ற ஏழு கடற்றொழிலாளர்கள் நேற்று திங்கள் இரவு எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையில் இலங்கை கடல் பகுதியில் வைத்து கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.

தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் குறித்த கடற்றொழிலாளர்களை இன்று (1) மதியம் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் இன்று (01.07.2025) மாலை குறித்த கடற்றொழிலாளர்களை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தியுள்ளனர்.

இதன்போது, விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த 07 கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...