Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 10
உலகம்செய்திகள்

பிரித்தானியாவின் பரபரப்பான வீதியில் இறந்து கிடந்த பெண்: விசாரணை தீவிரம்

Share

பிரித்தானியாவின் மான்செஸ்டரில் பெண்ணொருவர் உயரமான கட்டிடத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மான்செஸ்டரின் பரபரப்பான வீதியான Great Ancoatsயில் பெண்ணொருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அவசர சேவைகள் அழைக்கப்பட்டன. பின்னர் லியோனார்டோ ஹொட்டல் மற்றும் விக்டோரியா ஹவுஸ் அடுக்குமாடி குடியிருப்புகளைச் சுற்றியுள்ள பகுதி சுற்றி வளைக்கப்பட்டது.

அத்துடன் பொலிஸ் தடுப்பு அமைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், குறித்த பெண் ஒரு கட்டிடத்தில் இருந்து விழுந்ததாக தெரிவதாகம், மேலும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றும் கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறை தெரிவித்தது.

மேலும் Greater Manchester Police கூறுகையில், “இன்று காலை 7 மணியளவில் ஒரு பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்க Great Ancoats வீதிக்கு அழைக்கப்பட்டோம். அவர் ஒரு கட்டிடத்தில் இருந்து விழுந்ததாகத் தெரிகிறது.

ஆனால் தற்போது சூழ்நிலைகளைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வடமேற்கு ஆம்புலன்ஸ் சேவையைத் தொடர்பு கொண்டுள்ளோம்” என தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
10 14
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி: அரசு அதிரடி சிக்கன நடவடிக்கைகள் அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதாரப்...

09 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல மாகாணங்களில் இன்று பிற்பகல் 2:00...

08 14
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பொருள் பணத்தில் சொத்துச் சேகரிப்பு: 4 கோடி ரூபாய் பெறுமதியான வீடு மற்றும் சொத்துக்கள் முடக்கம்!

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்களைச் சேர்த்த குற்றச்சாட்டில், சந்தேகநபர் ஒருவரின்...

05 15
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவனொளிபாதமலைக்கு போதைப்பொருட்களுடன் சென்ற 08 பேர் கைது: மவுசாக்கலை சோதனைச் சாவடியில் சிக்கினர்!

புனித சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற பக்தர்கள் என்ற போர்வையில் போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற 8 பேர்...