7 12
இலங்கைசெய்திகள்

ஷிரந்தியை காப்பாற்ற தேரர்களை நாடும் மகிந்த! போலி செய்தி தொடர்பில் வெளியான அறிக்கை

Share

தனது மனைவி ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி தற்போதைய ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு அழுத்தம் கொடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மல்வத்து பீடத்தின் பிரதான தேரரிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்படும் விடயம் போலியானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மல்வத்து பீடத்தின் பிரதான தேரரிடம் கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படும் செய்தி தொடர்பில் கண்டியில் உள்ள மல்வத்து மகா விகாரை சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மகாநாயக்க தேரரின் அறிவுறுத்தல்களின் பேரில் மல்வத்து மகா விகாரையின் பிரதிப் பதிவாளர் மஹாவெல ரத்தனபால ஸ்தவீர இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி எந்த சந்திப்பும் அல்லது தொலைபேசி உரையாடலும் நடக்கவில்லை என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் நோக்கில் இதுபோன்ற தவறான செய்திகளை உருவாக்கி பரப்ப முயற்சிக்கும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...