8 7
உலகம்செய்திகள்

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பின் அமெரிக்காவின் புதிய நிலைப்பாடு

Share

இலங்கை உட்பட பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் தொடர்புடைய பொறுப்புக்கூறலை நிவர்த்தி செய்வதற்காக செயல்படும் சுமார் 24 திட்டங்களுக்கான நிதி பங்களிப்பை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என வெள்ளை மாளிகை பரிந்துரைத்துள்ளது.

இலங்கை, ஈராக், சிரியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இந்த பட்டியலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் OMB அலுவலகம் வெளியிட்ட இந்தப் பரிந்துரை இறுதியானது அல்ல. .

வெளியுறவுத்துறை பணியகங்களுக்கு ஜுலை மாதம் 11ஆம் திகதி வரை மேல்முறையீடு செய்ய அவகாசம் உள்ளது.

ஆபத்தில் உள்ள திட்டங்களில், உலகளாவிய உரிமைகள் இணக்கம் மற்றும் உக்ரைனில் உள்ள சட்ட நடவடிக்கை வலையமைப்பும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இது ஆதாரங்களை சேகரிக்கவும், ரஷ்ய போர்க்குற்றங்கள் தொடர்பான வழக்குகளை ஆதரிக்கவும் உதவுகிறது. மியன்மார் இராணுவத்தின் அட்டூழியங்கள் மற்றும் சிரியாவின் முன்னாள் ஜனாதிபதியின் கீழ் நடந்த துஷ்பிரயோகங்களை ஆவணப்படுத்தும் முயற்சிகள் ஆகியவைகளும் இதில் அடங்கும்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இந்தத் திட்டங்களைப் பாதுகாக்க மட்டுப்படுத்தப்பட்ட முயற்சிகளை மேற்கொள்வார் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.

எனினும் அவர் உக்ரைனுடன் தொடர்புடையவற்றை ஆதரிக்கலாம். இந்த முடிவு டிரம்ப் நிர்வாகத்தின் அமெரிக்கா முதலில் கொள்கையை பிரதிபலிக்கிறது.

இது உலகளாவிய மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை ஆதரிப்பதை விட உள்நாட்டு மறுசீரமைப்புக்கு முன்னுரிமை அளிக்கிறது.

முந்தைய வெளிநாட்டு உதவி குறைப்புகள் ஏற்கனவே மனிதாபிமான நடவடிக்கைகள் மற்றும் போர்க்குற்ற ஆவணப்படுத்தல் முயற்சிகளை பலவீனப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...