3
இலங்கைசெய்திகள்

அம்பகமுவ பிரதேச சபை ஐக்கிய மக்கள் சக்தி வசம்

Share

அம்பகமுவ பிரதேச சபையின் தவிசாளராக ஐக்கிய மக்கள் சத்தியின் உறுப்பினர் கபில நாகந்தல தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அம்பகமுவ பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான முதலாம் கன்னி அமர்வு மத்திய மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எம்.கே.சி.கே அத்தபத்து தலைமையில் இன்று (26) அம்பகமுவ பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் போது 21 உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிலையில் திறந்த வாக்கெடுப்பினூடாக தலைவர் தெரிவு இடம்பெற்றதுடன் உப தலைவர் தெரிவு இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டது.

இதன்போது பகிரங்க வாக்கெடுப்பினூடாக தலைவர் தெரிவு இடம்பெற்றதில் 11 வாக்குகளை பெற்று ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் நாகந்தலாகே தொன் கபில நாகந்தல தலாவராக தெரிவு செய்யப்பட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 06, ஐக்கிய தேசிய கட்சி 01, ஈரேஸ் ஜனநாயக முன்னணி 01, ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன 01, சர்வஜன அதிகாரம் 01, சுயேற்சைக்குழு 01 என 11 உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தனர்.

தேசிய மக்கள் சார்பில் அமரசிங்க வசந்த பிரியதர்சன போட்டியிட்ட நிலையில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் 08, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 02 வாக்குகள் என 10 வாக்குகளை பெற்றார்.இலங்கை விடுதி

உப தவிசாளர் தெரிவிற்கு இரகசிய வாக்கெடுப்பிற்கு அதிக ஆதரவு கிடைத்த நிலையில் இரகசிய வாக்கெடுப்பில் சுயேட்சைக்குழு உறுப்பினர் விதான கமகே ஹெலப்பிரிய நந்தராஜ் தேசிய மக்கள் சார்பில் உடகெதரலாகே முதியான்சலாகே ஹரிந்த ஆசிரி உடகே ஆகியோரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

இதன் போது தேசிய மக்கள் சக்தின் உறுப்பினர் 12 வாக்குகளை பெற்று உப தலைவராக தெரிவானர்.

சுயேட்சைக்குழு உறுப்பினர் நர்ந்தராஜ் 07 வாக்குகளை பெற்றதுடன் இரண்டு வாக்குகள் நிராகரிக்கப்பட்ட வாக்குகளாக கணிக்கப்பட்டது.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...