21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

Share

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் கைப்பற்றிக் கொண்டுள்ளது.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது தேசிய மக்கள் சக்திக்கு 151 உள்ளூராட்சி மன்றங்களில் தெளிவான பெரும்பான்மை கிடைக்கப் பெற்றிருந்தது.

அதற்கு மேலதிகமாக ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் மேலும் 49 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை இதுவரை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைப்பற்றிக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி இதுவரை 27 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை மட்டுமே கைப்பற்றிக் கொண்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி 17 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டுள்ளது. பொதுஜன பெரமுன கட்சி ஒரு உள்ளுராட்சி மன்றத்தின் அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.இலங்கை விடுதி

ஐக்கிய தேசியக் கட்சியால் எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்தின் அதிகாரத்தையும் கைப்பற்றிக் கொள்ளமுடியவில்லை.

அதேநேரம், சுயேட்சைக் குழுக்கள் உள்ளிட்ட ஏனைய தரப்புகள் 12 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...