22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

Share

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த போராட்டங்கள் அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றன.

நாடு முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் லோஸ் ஏஞ்சல்ஸ், ஆஸ்டின், பாஸ்டன், சின்சினாட்டி, சிகாகோ, போர்ட்லேண்ட் மற்றும் வோஷிங்டன், டி.சி. உள்ளிட்ட நகரங்களும் ஈடுபட்டன.

“ட்ரம்ப் ஒரு போர் குற்றவாளி” மற்றும் “ஈரானுக்கு அமெரிக்கா-இஸ்ரேல் போர் வேண்டாம்” என்ற வாசகங்கள் இடப்பட்ட பதாகைகளை ஏந்தி மக்கள் போராட்டங்களில் ஈடுப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் – ஈரான் இடையே கடந்த 10 நாட்களுக்கு மேலாக தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்காவும் இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவும் தற்போது ஈரானுக்கு எதிரான நேரடி இராணுவ நடவடிக்கையை முதன் முறையாக தொடங்கி உள்ளது.

அமெரிக்க படைகள் தாக்கியதில் அணு சக்தி தளங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு உள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். தங்கள் மீது தாக்குதல் நடத்தி இருப்பதால் ஈரான் பதிலடி கொடுக்கும் என்ற சூழ்நிலை நிலவி வருகிறது.

இதனால் அமெரிக்காவில் உள்ள நகரங்கள் அனைத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க குடிமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்க வெளியுறவு துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் லெபனானில் உள்ள அமெரிக்க துணை தூதரக ஊழியர்கள் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், ஈரான் மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...