8 3
உலகம்செய்திகள்

அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் : எச்சரிக்கும் ஈரான்

Share

ஈரானிய அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் மூர்க்கத்தனமானவை என்றும் இது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்க தெஹ்ரான் அனைத்து விருப்பங்களையும் கொண்டுள்ளது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய பின்னர், ஈரானில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டதைக் கண்டறிந்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தெரிவித்துள்ளன.

சிறிது நேரத்திற்கு முன்பு, ஈரானில் இருந்து இஸ்ரேல் நாட்டை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் முழுவதும் பல பகுதிகளில் சைரன்கள் ஒலித்தன என்று ஐ.டி.எஃப் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் சில பகுதிகளில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் தஞ்சம் அடையுமாறு குடியிருப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரானின் அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்க தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் தனது வான்வெளியை மூடிவிட்டதாக இஸ்ரேல் விமான நிலைய ஆணையம் முன்னதாக ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது,

இருப்பினும் எகிப்து மற்றும் ஜோர்தானுடனான தரைவழிப் போக்குவரத்து வழக்கம் போல் இயங்குகிறது. இஸ்ரேலின் வான்வெளி நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் மூடப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் விமான நிறுவனங்களுடன் புதுப்பித்த நிலையில் இருக்க வேண்டும். சினாய் மற்றும் ஜோர்தானுக்கான தரைவழி கடவைகள் வழக்கம் போல் இயங்குகின்றன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026 ஜனவரியில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உயர்வு!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்த அறிக்கையை இலங்கை மத்திய...

12 3
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு முயற்சி: 30 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றித் தொடரும் பயணம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி, பல...

11 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகளின் நினைவாக இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தந்தை!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக, தனது 16 வயது மகளின் நினைவாக...

10 4
உலகம்செய்திகள்

ஈரான் மீதான கூட்டுத் தாக்குதல்: பதற்றத்தைக் குறைக்க இந்தியா வலியுறுத்தல்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானில் உள்ள ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ள...