Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered 4
உலகம்செய்திகள்

இஸ்ரேலின் முக்கிய கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தி அதிரடி காட்டும் ஈரான்

Share

இஸ்ரேலின் பீர் ஷெவா நகரின் தெற்கு பகுதியில் உள்ள மைக்ரோசாஃப்ட் அலுவலகங்கள் தீப்பிடிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

அதே பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களும் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தீயணைப்புத் துறையும் மருத்துவ குழுவும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று சேவையாற்றி வருகின்றனர்.

ஆறு பேர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று இஸ்ரேலின் அவசர சேவை அமைப்பான மேகன் டேவிட் எடோம் (MDA) தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலால் சற்று முன்னர் வரை காயமடைந்த ஆறுபேரை வரை மீட்டுள்ளோம் என மேகன் டேவிட் எடோம் தெரிவித்துள்ளது.

நாம் இதுவரை கண்டுபிடித்தவர்கள் சிறு காயங்களுடன் இருக்கின்றார்கள் என்று மேகன் டேவிட் எடோம் பேச்சாளர் ஒருவர் காணொளி வெளியிட்டுள்ளார்.

MDA வெளியிட்ட புகைப்படங்களில் கட்டிடத்தின் முன்பகுதியில் கடும் சேதம், தீப்பிடித்த கார்கள் மற்றும் காற்றில் கறுப்பு புகை எழுவதைக் காணக்கூடியதாக உள்ளது.

அந்த டெக் பூங்காவில் மைக்ரோசொப்ட் அலுவலகம் உள்ளிட்ட பல அலுவலகங்கள் உள்ளதால், அங்கு பணிபுரிபவர்கள் மற்றும் குடியிருப்பவர்களுக்கு சிகிச்சை வழங்க MDA இடைநிலை சிகிச்சை மையங்களை அமைத்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...

Untitled 101
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வத்தளை நாயக்ககந்த பாடசாலையில் புதிய முதல்வர் நியமனத்திற்கு எதிர்ப்பு போராட்டம்!

வத்தளை, நாயக்ககந்த பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க மகளிர் பாடசாலையான பாலிகா மகா வித்தியாலயத்திற்கு (குட்...

Untitled 100
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: ஈரானின் மஷ்ஹத் நகரில் ரயில் சேவைகள் அதிரடி நிறுத்தம்!

ஈரானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான மஷ்ஹத்தின் (Mashhad) ஆளுநர், அந்த நகரில் உள்ள...

Untitled 99
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம்: தட்டுப்பாடின்றி வழங்க அமைச்சர் உறுதி!

உலகளாவிய சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் உயர்விற்கு இணையாக, இலங்கையிலும் உள்நாட்டு எரிவாயு விலைகள்...