14 1
உலகம்செய்திகள்

இஸ்ரேலுக்கு அடுத்த அடி : நான்காவது F-35 போர் விமானத்தை வீழ்த்தியது ஈரான்

Share

ஈரானிய(iran) ஆயுதப் படைகளின் வான் பாதுகாப்பு அமைப்பு, வடமேற்கு ஈரானின் தப்ரிஸில் இஸ்ரேலிய F-35 போர் விமானத்தை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியதாக கிழக்கு அஜர்பைஜான் நெருக்கடி மேலாண்மை பணிப்பாளர் ஜெனரல் மஜித் ஃபர்ஷி தெரிவித்துள்ளார்.

தப்ரிஸில் இரண்டு இஸ்ரேலிய ட்ரோன்கள் முன்னதாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

தப்ரிஸைச் சுற்றியுள்ள மூன்று இடங்கள் செவ்வாயன்று குறிவைக்கப்பட்டதாகவும், இஸ்ரேலிய ட்ரோன்களை(MAVs) வீழ்த்துவதற்கு வான் பாதுகாப்பு அமைப்புகள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இது ஈரானின் வான் பாதுகாப்புப் படைகளால் இடைமறித்து அழிக்கப்பட்ட நான்காவது F-35 போர் விமானமாகும்.

ஜூன் 13 அன்று இரவு ஈரானிய எல்லைக்குள் இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடங்கியது. உயர் பதவியில் இருந்த ஈரானிய இராணுவ அதிகாரிகள் இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்டனர்.

ஈரானின் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதிகளின் தலைவர் மேஜர் ஜெனரல் முகமது பாகேரி மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹொசைன் சலாமி ஆகியோர் தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்ட மூத்த இராணுவ அதிகாரிகளில் அடங்குவர்.

Share
தொடர்புடையது
12 4
செய்திகள்உலகம்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: அமெரிக்காவில் போர் நிறுத்த முயற்சி முறியடிப்பு

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

11 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை முடக்கம்: வளைகுடா கடற்பரப்பில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் காரணமாக ஈரானின் ஹோர்முஸ் நீரிணை (Strait of...

10 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை அருகே இரண்டாவது ஈரானிய கப்பல்: 87 சடலங்கள் மீட்பு – பாராளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம்!

இலங்கை கடற்பரப்பை ஒட்டியுள்ள பிரத்தியேகப் பொருளாதார வலயத்தில் (EEZ) இரண்டாவது ஈரானிய கப்பல் (IRINS Bushehr...

09 4
செய்திகள்உலகம்

ஈரான் அணு ஆயுதத் திறனை இழக்கும் வரை போர்நிறுத்தம் கடினம்: அவுஸ்திரேலிய, கனடிய பிரதமர்கள் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் மற்றும் கனடியப்...