25 684daa7056229
உலகம்செய்திகள்

திடீரென இரத்து செய்யப்பட்ட அமெரிக்க – ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை!

Share

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் நடைபெறவிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தை திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது.

நாளை நடத்தப்படவிருந்த குறித்த பேச்சுவார்த்தை இரத்து செய்யப்பட்டமை தொடர்பில் ஓமானிய வெளியுறவு அமைச்சர் பத்ர் அல்புசைடி உறுதிபடுத்தியுள்ளார்.

இஸ்ரேல் – ஈரானுக்கு இடையில் போர்பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானுடன் அணுசக்தி பேச்சுவார்த்தையை மேற்கொள்ள அமெரிக்கா முன்வந்தது.

அதற்கமைய, ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க-ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தைகளின் அடுத்த சுற்று இடம்பெறவிருந்தது.

இருப்பினும், குறித்த சுற்று பேச்சுவார்த்தை தற்போது இரத்து செய்யப்பட்டுள்ளதாக உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் இட்டுள்ள பதவில், “இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் ஈரானுக்கு ஒரு ஒப்பந்தம் செய்ய 60 நாள் இறுதி எச்சரிக்கை விடுத்தேன். அவர்கள் அதைச் செய்திருக்க வேண்டும்! இன்று 61ஆவது நாள்.

நான் அவர்களிடம் என்ன செய்ய வேண்டும் என்று சொன்னேன், ஆனால் அவர்களால் அதை அணுக முடியவில்லை. இப்போது அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்துள்ளது” என குறிப்பிட்டிருந்தார்.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...