25 6848f357eab31 1
இலங்கைசெய்திகள்

அநுர அரசின் மற்றுமொரு அதிரடி – பதற்றத்தில் பல சிறை அதிகாரிகள்

Share

விசேட தினங்களில் ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட கைதிகளின் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்படாத கைதிகள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பான விசாரணை தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் பல மூத்த சிறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த தயாராகி வருகிறது.

சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட கைதிகளை அடையாளம் காணும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது.

அவர்களை கைது செய்து மீண்டும் சிறையில் அடைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சில காலமாகவே இதுபோன்ற சம்பவங்கள் சிறையில் நடந்து வருவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. “இந்த சம்பவங்கள் அனுராதபுரம் சிறையில் மட்டுமல்ல. வேறு பல சிறைகளிலும் நடந்துள்ளன.

எனவே, அனைத்து சிறைகளிலிருந்தும் விடுவிக்கப்பட்ட கைதிகளின் பதிவுகள் ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

விசாரணைகள் முடிவடையும் நேரத்தில் மேலும் பல சிறை அதிகாரிகள் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்,” என்று மூத்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...