25 6848f357eab31
இலங்கைசெய்திகள்

அநுர அரசியல் மற்றுமொரு அதிரடி – பதற்றத்தில் பல சிறை அதிகாரிகள்

Share

விசேட தினங்களில் ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட கைதிகளின் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்படாத கைதிகள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பான விசாரணை தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் பல மூத்த சிறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த தயாராகி வருகிறது.

சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட கைதிகளை அடையாளம் காணும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது.

அவர்களை கைது செய்து மீண்டும் சிறையில் அடைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சில காலமாகவே இதுபோன்ற சம்பவங்கள் சிறையில் நடந்து வருவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. “இந்த சம்பவங்கள் அனுராதபுரம் சிறையில் மட்டுமல்ல. வேறு பல சிறைகளிலும் நடந்துள்ளன.

எனவே, அனைத்து சிறைகளிலிருந்தும் விடுவிக்கப்பட்ட கைதிகளின் பதிவுகள் ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

விசாரணைகள் முடிவடையும் நேரத்தில் மேலும் பல சிறை அதிகாரிகள் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்,” என்று மூத்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
1732374016 images 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை: மலைப்பகுதி மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, கண்டி, நுவரெலியா, பதுளை மற்றும் மாத்தளை ஆகிய...

24514649 rain
செய்திகள்விளையாட்டு

இலங்கை – பாகிஸ்தான் டி20 ரத்து செய்யப்பட்ட போட்டியின் நுழைவுச்சீட்டுகள் நாளை செல்லுபடியாகும்!

மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டிக்காக...

AP01 10 2026 000005B
செய்திகள்உலகம்

என்னை விட நோபல் பரிசுக்குத் தகுதியானவர் எவருமில்லை: இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டொனால்ட் ட்ரம்ப் பெருமிதம்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பாரிய போர் அபாயத்தைத் தான் தடுத்து நிறுத்தியதாகவும், அதன் அடிப்படையில்...

06 1
செய்திகள்அரசியல்இலங்கை

2026-ஆம் ஆண்டு இலங்கையின் பாரிய வீட்டு நிர்மாண ஆண்டு: ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பிரகடனம்!

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறிய மக்களுக்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தின் கீழ்,...