25 6846be325a66f
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் கடத்தல்காரர் ஹரக் கட்டா தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Share

போதைப்பொருள் கடத்தல்காரர் ஹரக் கட்டாவிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்குமாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள, சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும், குற்றம் சாட்டப்பட்ட நதுன் சிந்தக விக்ரமரத்ன எனப்படும் ஹரக் கட்டா தொடர்பான வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விசாரணைக்குட்படுத்தப்பட்டது.

நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட நதுன் சிந்தகவிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அரச சட்டத்தரணி சஜித் பண்டார தெரிவித்தார்.

அதன்படி, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் பிரதிவாதியிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்வதற்கு வசதியாக உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு அரச சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரினார்.

கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் பிரதிவாதியிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்வதற்கு பயங்கரவாத விசாணைப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...